districts

தலையாட்டி பொம்மை பயிற்சி பட்டறை மாணவர்களுக்கு ஆட்சியர் அழைப்பு

தஞ்சாவூர், ஏப்.17-

    தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கான கண்காட்சி மற்றும் பட்ட றைக் கூடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கூடத்தில், தஞ்சாவூர் மாவட்டத்தின் பெருமைகளை பறைசாற்றும் கண்காட்சி மற்றும் பல்வேறு பயிற்சி பட்டறை தொடர்த்து நடத்திட தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சிக் குழும கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.  

   இதன் அடிப்படையில் உலக பாரம்பரிய தினமான ஏப்ரல் 18 அன்று தஞ்சையின் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களில் ஒன்றான தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை குறித்த மாணவர்களுக்கான ஒரு நாள் கை வினைப் பொருள் செய்முறை பயிற்சி முகாம் நடைபெற வுள்ளது.

    இப் பயிற்சியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவி கள், 9842455765 மற்றும் 4443267422 என்ற எண்களை தொடர்பு கொண்டு தங்கள் பெயர்களை பதிவு செய்து பங்கேற்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. இன்றைய தலை முறையினர் நமது கலைகளின் சிறப்புகளை நேரடி செயல்முறை மூலம் தெரிந்து கொள்ள செய்வது தான் இப்பயிற்சியின் நோக்கமாகும் என மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.