மயிலாடுதுறை, மார்ச் 24 - மயிலாடுதுறையில் அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு (சிஐடியூ) சார்பில் ஆர்.ஓ.ஏ கட்டிடத்தில் சர்வ தேச பெண்கள் தின கருத்தரங்கம் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜி. வெண்ணிலா தலைமையில் நடை பெற்றது. சிஐடியூ மாவட்டக்குழு உறுப்பி னர் எஸ்.ஜோதி, மின்வாரிய உழைக்கும் பெண்கள் இணை கன்வீனர் பரிமளா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாதர் சங்க மத்தியக்குழு உறுப்பினர் என்.அமிர்தம், மாநில துணைத் தலைவர் ஜி.கலைச்செல்வி, மாவட்டத் தலைவர் ராஜலெட்சுமி, உழைக் கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு கன் வீனர் வேம்பு, மின்வாரிய உழைக்கும் பெண்கள் மாவட்ட உறுப்பினர் கே.ஜெய லெட்சுமி, கன்வீனர், மாதர் சங்க மாவட்டக் குழு உறுப்பினர் வனரோஜா உள்ளிட்டோர் உரையாற்றினர்.