தூத்துக்குடி, ஏப். 8- மக்களவைத் தேர்தலை முன் னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பாது காப்பு முன்னெச்ச ரிக்கை நடவடிக்கை யாக மாவட்டத்தின் அனைத்து முக்கிய இடங்களிலும் தீவிர சோதனை மேற்கொள்ள காவல்துறை வெடிகுண்டு நிபு ணத்துவ குழுவினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவிட்டார். அவரது உத்தரவின்படி உதவி ஆய்வாளர் தலைமை யிலான காவல்துறை வெடிகுண்டு நிபுணத்துவ குழுவினர் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம், கடற்கரை பகுதி கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் மக்கள் கூடும் முக்கிய இடங்கள் உட்பட மாவட்டத்தின் அனைத்து முக்கிய இடங்களி லும் உள்ள சந்தேகப்படும்படியான பார்சல்கள், மூட்டைகள், பைகள் ஆகியவற்றை சோதனை செய்து அசம்பாவிதம் ஏதும் நடைபெறா வண்ணம் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மேற்படி காவல்துறை வெடிகுண்டு நிபுணத்துவ குழுவினர் தொடர்ந்து மாவட்டத்தின் அனைத்து முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு நட வடிக்கையாக தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.