தஞ்சாவூர், ஜூன் 13 -
கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் உறுப்பினர்கள் ஆதார் விவரங்களை அளிக்க வேண்டும் என கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் தஞ்சாவூர் மண்டல துணைப் பதி வாளர் (வீட்டு வசதி) மா.நாராயணமூர்த்தி அறிவுறுத்தி யுள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது: கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் தஞ்சாவூர் மண்டல அலுவலகக் கட்டுப்பாட்டில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப் பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் முதன் மைக் கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதில் ஏற்கெனவே உறுப்பினராக உள்ளவர்கள் தங்க ளது குடும்ப அட்டை, ஆதார் அட்டை விவரங்களை தொடர் புடைய கூட்டுறவு வீட்டு வசதி சங்க அலுவலர்களிடம் ஜூன் 15-ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.