districts

திருச்சி முக்கிய செய்திகள்

பூங்கா புனரமைப்பு பணிகள் ஆய்வு 

தஞ்சாவூர், பிப்.13-  தஞ்சாவூர் மாநக ராட்சி சிவகங்கை பூங்கா வில், புனரமைக்கும் பணி கள் நடைபெற்று வரு வதை மாவட்ட ஆட்சி யர் தீபக் ஜேக்கப் செவ் வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தஞ்சாவூர் மாநக ராட்சி சீர்மிகு நகரம் திட்டத் தின்கீழ் சிவகங்கை பூங்காவில் நடைபெற்று  வரும் சுற்றுச்சுவர் அமைக் கும் பணி, குழந்தைகள் விளையாட்டு மைதா னம், நீச்சல் குளம், நடை பாதை சீரமைக்கும் பணி,  கண்காணிப்பு கேமரா அமைக்கும் பணி, அலங் கார விளக்கு அமைக்கும் பணி போன்ற பல்வேறு  மேம்பாட்டு பணிகள் நடை பெற்று வருகின்றன. இதனை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணி களை விரைவாக முடித்து  பொதுமக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வர  சம்பந்தப்பட்ட அலுவ லர்களுக்கு அறிவுறுத்தி னார். ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் இரா.மகேஸ்வரி உள்ளிட் டோர் கலந்து கொண்ட னர்.

பிளாஸ்டிக் பறிமுதல்

பாபநாசம், பிப்.13 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூராட்சி சார்பில் திருப்பாலைத் துறையில் உள்ள கடை களில் தமிழக அரசால்  தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என சோதனை நடந்தது. இதில் பாபநாசம் பேரூ ராட்சி செயல் அலுவ லர் ரவிஷங்கர், சுகாதார  ஆய்வாளர் பரமசிவம் மற்றும் பணியாளர்கள் 10  கிலோ தடை செய்யப் பட்ட பிளாஸ்டிக்கை பறி முதல் செய்து, அக்கடை களுக்கு ரூ.5,000 அப ராதம் விதித்தனர்.

நீரில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

புதுக்கோட்டை, பிப்.13 - புதுக்கோட்டை பல்ல வன் குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞர் நீரில்  மூழ்கி உயிரிழந்த சம்ப வம் அப்பகுதியில் சோ கத்தை எற்படுத்தியது. புதுக்கோட்டை மாவட் டம் காமராஜபுரம் 33-ஆம் வீதியைச் சேர்ந்தவர் சிவக்குமார்(28). இவர் புதுக்கோட்டையில் உள்ள ஒரு கருவாடு கையில் வேலைசெய்து வந்தார். இந்நிலையில், அங்குள்ள பல்லவன்  குளத்தில் மதுபோதை யில் குளிக்கச் சென்ற அவர் நீரில் மூழ்கி இறந் துள்ளதாகக் கூறப்படு கிறது.  இந்நிலையில், சிவக் குமாரின் உடல் செவ்வா யன்று காலை மிதந் துள்ளது. அருகில் இருந் தவர்கள் புதுக்கோட்டை நகர காவல்நிலையம் மற்றும் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீய ணைப்பு நிலையத்தினர் உடலை மீட்டு புதுக் கோட்டை அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவ மனைக்கு உடற்கூறாய் வுக்காக அனுப்பி வைத்த னர். இதுகுறித்து புதுக் கோட்டை நகர காவல்  நிலையத்தினர் விசா ரித்து வருகின்றனர்.

மகன் இறந்துவிட்ட நிலையில் கடனை கட்டச் சொல்லி தொந்தரவு ஆட்சியரிடம் மூதாட்டி புகார் மனு

அரியலூர், பிப்.13 - மகன் இறந்துவிட்ட நிலையில், அவர் வாங்கிய கடனை  கட்டச் சொல்லி கூட்டுறவு சங்கத்தினர் தொந்தரவு செய்வதாக  ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணாவிடம், மூதாட்டி ஒருவர்  திங்கள்கிழமை புகார் மனு அளித்தார். அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே ஜெயங் கொண்டம் பிரதானச் சாலையில் வசிக்கும் மா.கலாவதி (70) அளித்த மனுவில், “எனது கணவர் மற்றும் மகன்கள் 3 பேரில்  இரண்டு பேர் இறந்து விட்டனர். இதில் மூன்றாவது மகன்  சங்கர் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக இருந்தார். அப்போது ஜெயங்கொண் டம் ஊராட்சி ஒன்றிய ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் சேமிப்புக் கடன் சங்கத்தில் கடன்  பெற்றிருந்தார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் கடந்த  1.12.2022 அன்று சங்கர் உயிரிழந்தார். அவர் உயிருடன் இருந்தபோது, சில தொகைகள் செலுத்தி யுள்ளார். இந்நிலையில், எனக்கும், ஜாமீன் கையெழுத் திட்ட நபருக்கும், என் மகன் வாங்கிய கடன் தொகையை செலுத்துமாறு மேற்கண்ட கூட்டுறவு சங்கத்தில் இருந்து தொடர்ந்து நெருக்கடி தரப்படுகிறது. இதனால் மன உளைச் சலுக்கு ஆளாகி இருக்கிறேன். தற்போது என்னிடம் எந்த சொத்தும் இல்லை. எனவே, எனது மகன் இறந்து விட்ட நிலையில், அவர் வாங்கியத் தொகையை ரத்து செய்ய மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரி விக்கப்பட்டுள்ளது.

நாகைகுட்டை ஏரியில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் சிபிஎம் மனு

அரியலூர், பிப்.13 - அரியலூர் மாவட்டம், அணிக்குதிச்சான் நாகை குட்டை ஏரியிலுள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, நீர்நிலைகளை பாது காத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணாவிடம், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் திங்கள்கிழமை மனு அளித்தனர். இதுதொடர்பாக கட்சியின் மாவட்டச் செயலாளர் எம். இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.பரம சிவம் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் அளித்த மனுவில், “அணிக்குதிச்சான் (வ)சர்வே எண்.6 யுடிஆர்-க்கு முன் நீர்நிலையாக இருந்தது. அது நாகை குட்டைஏரி. இந்த குட்டை  உட்பிரிவு 6/2, 6/3, 6/4 என பட்டா மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இந்த பட்டா மாற்றத்தை ரத்து செய்து, கிராம மக்க ளுக்கு நீர்நிலையை ஊர்ஜிதம் செய்ய வேண்டும். அங்குள்ள  ஆக்கிரமிப்பை அகற்றி குட்டையை அளவீடு செய்து வேலி அமைக்க வேண்டும். கால்நடைகளை பயன்படுத்தும் அள விற்கு குட்டையை மேம்படுத்த வேண்டும் என்பது குறித்து  கடந்த 2020 இல் மனு அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உச்சநீதிமன்ற  உத்தரவுப்படி ஆக்கிரமிப்பை அகற்றி நீர்நிலைகளை பாது காக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரி விக்கப்பட்டுள்ளது.

சுண்ணாம்புக்கல் சுரங்க விரிவாக்க  கருத்து கேட்புக் கூட்டத்தை நடத்தக் கூடாது! நிலம் அளித்த விவசாயிகள் மீண்டும் மனு

அரியலூர், பிப்.13- இழப்பீடு கேட்டு நீதி மன்றத்தில் வழக்கு நிலுவை யில் உள்ளதால், அரியலூர்  சிமெண்ட் ஆலை சுண்ணாம் புக் கல் சுரங்க விரிவாக்க கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தக் கூடாது எனக் கோரி நிலம் அளித்த விவசாயிகள் ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் மீண்டும் மனு அளித்துள்ளனர். இதுகுறித்து, அரியலூர் மாவட்டம் புதுப்பாளையம், பெரியநாகலூர், அஸ்தினா புரம், வாலாஜநகரம், தாம ரைக்குளம், சீனிவாசபுரம் ஆகிய கிராம மக்கள் அளித்த  மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசு சிமெண்ட் ஆலைக்கு சுண்ணாம்புக் கல் எடுப்பதற்காக நிலம் கொடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை நிலத்துக்கான உரிய இழப்பீடு வழங்கப் படவில்லை. இதுகுறித்து நீதி மன்றத்தில் வழக்கு தொடுக் கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாங்கள் கொடுத்துள்ள நிலத்தில் கடந்தாண்டு நவம்பர் 28  அன்று சுண்ணாம்புக் கல்  சுரங்கம் விரிவாக்கம் செய்வ தற்கான கருத்து கேட்புக் கூட்டத்தை அரசு சிமெண்ட்  ஆலை நடத்த முடிவு செய்தது.  இதற்கு மேற்கண்ட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இரண்டு முறை  கூட்டம் ஒத்தி வைக்கப்பட டது. தற்போது மீண்டும் இந்த கருத்து கேட்புக் கூட்டம் பிப்.24 அன்று நடத்தப் படுகிறது.  நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோது, கருத்து கேட்புக் கூட்டம் நடத்துவது சட்டப்படி குற்ற மாகும். எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கும் வரை கருத்து கேட்புக் கூட்டத்தை நடத்தக் கூடாது. மீறி நடத்த  முடிவெடுத்தால், உண்ணா விரதம், சாலை மறியல்  போராட்டத்தில் ஈடுபடு வோம். மேலும் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை அரசாங்கத்திடம் ஒப்படைப் போம். இவ்வாறு அதில் கூறி யுள்ளனர்.

பிப்.16 வேலை நிறுத்தத்தில் கட்டுமானத் தொழிலாளர் பங்கேற்பு

அரியலூர், பிப்.13 - இந்திய கட்டுமான தொழிலாளர் சம்மேளன மாநிலக் குழு கூட்டம் அரியலூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாநில துணைத் தலைவர் சுப்பையா தலைமை வகித்தார். சிறப்புத் தலைவர் த.சிங்காரவேலு குழு முடிவு கள் குறித்து பேசினார். பொதுச் செயலர் குமார் வேலை அறிக்கை யையும், மாநிலப் பொருளாளர் லூர்து ரூபி வரவு-செலவு அறிக்கையை யும் முன்வைத்தனர். சிஐடியு மாநில துணைச் செயலர் தங்கமோகன், சங்க வளர்ச்சிப் பணிகள் குறித்து பேசினர். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், நலவாரிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பிப்.16 வேலைநிறுத்தப் போராட்டத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள் அதிகளவில் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.

தமிழ் பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்கள் நியமனம்

தஞ்சாவூர், பிப்.13 -  தஞ்சாவூர், தமிழ் பல்கலைக்கழகத்திற்கு பேரவை உறுப்பினர் களாக மூன்று பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  இதுகுறித்து, தமிழ்ப் பல்கலைக்கழக பதிவாளர் சி.தியாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்ப் பல்கலைக்கழக இணை வேந்தராகிய தமிழ் ஆட்சிமொழி மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்ச ரால், சென்னை சாலிகிராமம் வி.எம். முத்துராமலிங்க ஆண்டவர், கோவை பாரதியார் பல்கலைக்கழக மொழியியல் துறை இணைப் பேரா சிரியர் எஸ்.சுந்தரபாலு, மதுரை காமராஜர் பல்கலைக்கழக மொழியி யல் துறை உதவி பேராசிரியர் ஆர்.குமாரசாமி ஆகியோர், தமிழ் பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்களாக பிப்ரவரி 6 ஆம் தேதி முதல்  3 ஆண்டு காலத்திற்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்” எனத் தெரி வித்துள்ளார். 

அம்மாபேட்டை அருகே 25 பேர் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தனர்

தஞ்சாவூர், பிப்.13- தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியம், அருந்தவபுரம் - தோப்புத்தெரு கிராமத்தில், பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி 25  பேர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்ட னர். நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அம்மாபேட்டை ஒன்றி யச் செயலாளர் ஏ.நம்பிராஜன் தலைமை வகித்தார். மாவட்டச் செயற் குழு உறுப்பினர் என்.வி.கண்ணன் கட்சியில் புதிதாக இணைந்த வர்களை வரவேற்று, கட்சியின் அமைப்பு செயல்திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினார்.  தொடர்ந்து புதிய கிளை அமைக்கப்பட்டு, கிளைச்  செயலாளராக ஜி.கண்ணன் தேர்வு செய்யப்பட்டார்.  ஒன்றியக் குழு உறுப் பினர்கள் கலந்து கொண்டனர்.

ஓய்வூதியர்களுக்கு அகவிலைப் படியை உயர்த்தி வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, பிப்.13 - ஓய்வூதியர்களுக்கு அகவிலைப் படியை உயர்த்தி வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஓய்வூதியர்களுக்கு அகவிலைப் படியை உயர்த்தி வழங்க வேண்டும். இடைக்கால நிவாரணம் ரூ.3000 வழங்க வேண்டும். 6 அம்ச கோரிக்கைகளை உடனடியாக பேசி தீர்க்க வேண்டும். திமுக அரசு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி சிஐடியு அரசு விரைவு போக்குவரத்து ஊழியர்கள் சங்கம், எஸ்சிடிசி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் ஓய்வு பெற் றோர் நல கூட்டமைப்பு சார்பில் செவ்வாயன்று திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாநகர் மாவட்டத் தலைவர் சீனிவா சன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், அரசு போக்குவரத்து ஊழியர் சங்க  திருச்சி மண்டல தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் மாணிக் கம், பணியாளர் சங்க பொதுச் செயலாளர் பெருமாள் மற்றும் சங்க நிர்வாகிகள் பேசினர். அரசு போக்குவரத்து ஊழியர் சங்க மண்டல பொருளாளர் சிங்கராயர் நன்றி கூறினார்.

நாளை புதுக்கோட்டையில்  சிறப்பு கல்விக் கடன் முகாம்

புதுக்கோட்டை, பிப்.13 - புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் “மாபெரும் சிறப்பு  கல்விக் கடன் முகாம்” 15.2.2024 அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி  அரசு மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரி விக்கையில், கல்விக் கடன் பெற விரும்பும் மாணவ, மாணவி யர் ஏற்கனவே www.vidyalakshmi.co.i அல்லது https: //www.jansamarth.in என்ற இணையதளத்தில் பதிவு செய்திருந்தால் அதற்கான விண்ணப்ப நகலுடன் பங்கேற் கலாம்.  இல்லையெனில் புதிதாக விண்ணப்பிக்க ஆதார் அட்டை,  குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-3 (மாணவர் மற்றும் பெற்றோர்), பான்கார்டு, 10, 11, 12 ஆம் வகுப்பு மதிப் பெண் சான்று, மாற்றுச் சான்றிதழ், வருமானச் சான்று,  சாதிச் சான்று, இருப்பிடச் சான்று, கல்லூரி கட்டணங்களுக் கான சான்று ஆகிய ஆவணங்களின் நகல்களுடன் மாவட்ட  நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு முகா மில் கலந்து கொள்ளலாம் என்றார்.

அடிக்கடி மின்தடை: மக்கள் கடும் அவதி அலட்சியப்படுத்தும் மின்வாரிய அதிகாரிகள்

மயிலாடுதுறை, பிப்.13 - அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பொது மக்கள், மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.  மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், விளாகம், நல்லாடை, திருவிளை யாட்டம், கொத்தங்குடி, ஈச்சங்குடி, ராதா நல்லூர், குமாரமங்கலம், கலசம்பாடி, தத்த னூர், செருகடம்பனூர், எரவாஞ்சேரி (ஒரு  பகுதி) உள்ளிட்ட கிராமங்களில் கடந்த ஒரு மாதமாக நாள்தோறும் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள், மாண வர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.  வேலங்குடி துணை மின் நிலையத்தி லிருந்து வரும் நல்லாடை உயர்மின் அழுத்த  பாதையில் தொடர்ந்து மின்தடை ஏற்படுவ தால், 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக் கப்படுகின்றனர். இச்சூழலில் மின்தடையை சரிசெய்ய வேண்டிய சங்கரன்பந்தல் பிரிவு அலுவலக அதிகாரிகள் அலட்சியத்துடன் செயல்படுகின்றனர்.  குறிப்பாக காலை நேரங்களில் ஏற்படும்  மின்தடை பல மணி நேரத்திற்கு பிறகு சரி செய்யப்பட்டு மின்சாரம் விநியோகிக்கப்படு கிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், பணிக்குச் செல்ப வர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளா கின்றனர். இதுகுறித்து சங்கரன்பந்தல் மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டால், உரிய பதிலும் இல்லை இளமின் பொறியா ளரும் பணிக்கு வரவில்லையென கூறுவதாக  பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சிறிய அளவிலான பழுதை சரி செய்வதற்கு கூட பல மணி நேரமாகி விடுவதாகவும் கூறு கின்றனர். மின்வாரிய உயர் அதிகாரிகள் உடனடி யாக இப்பிரச்சனையில் தலையிட்டு, உரிய  நடவடிக்கை எடுப்பார்களா?