சீகாழி, டிச.22 - மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே சிதம்ப ரத்திலிருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் புத்தூரிலிருந்து திருமயி லாடி, கொப்பியம், மாதானம், புதுப்பட்டினம் வழியாக பழை யாறு மீன்பிடி துறைமுகத்து க்கு செல்லும் நெடுஞ்சாலை பிரியும் இடத்தில் புத்தூரில் சாலை நடுவே பள்ளம் ஏற்பட்டு உள்ளது. கடந்த 10 நாட்களாக தொடர்ந்து வாக னங்கள் வந்து சென்று கொண்டிருப்பதால் இந்த பள்ளம் மேலும் ஆழம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. தற்போது சாலை யின் நடுவே அரையடி ஆழத்துக்கு பள்ளம் உள்ளதால் சிதம்பரம் மற்றும் சீர்காழியிலி ருந்து பழையாறு மீன்பிடி துறைமுகம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள், கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் திரும்பும் போது தடுமாறி செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் சாலையிலிருந்து திரும்பும் போது இந்த பள்ளத்தில் விழுந்து அடிக்கடி விபத்துக்கு உள்ளாகின்றனர். மேலும் எந்நேரத்திலும் சாலையின் நடுவே பள்ளத்தில் தண்ணீர் தேங்கி உள்ளதால் பள்ளத்தின் ஆழம் தெரியாமல் சிலர் விழுந்து விபத்துக்குள்ளா கின்றனர். எனவே புத்தூர் நெடுஞ்சாலையின் நடுவே உள்ள பள்ளத்தை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.