கோயம்புத்தூர் அரசு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் தேர்வு மதிப்பெண் முறைகேட்டில் ஈடுபட்டதை கண்டித்து ஜனநாயக முறையில் போராடிய இந்திய மாணவர் சங்க தோழர்களை கைது செய்து கோயம்புத்தூர் காவல்துறை அராஜகமாக நடந்து கொண்டது. இதைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியில் மாவட்ட செயலாளர் பிரபாகரன் தலைமையில், கைது செய்தவர்களை விடுதலை செய்யக்கோரி போராட்டம் நடைபெற்றது.