கும்பகோணம், பிப்.13- கும்பகோணம், சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் சீனிவாச ராமானுஜன் மையத்தில், இந்திய கடற்படை சிம்போனிக் இசைக்குழு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வை, திருச்சி கடற்படை ஆயுத முகாம் ஏற்பாடு செய்தது. லெப்டினன்ட் கமாண்டர் ஜெயபால் பத்மநாபன் தலைமையிலான இசைக்குழு, சிம்போனிக், தற்காப்பு, இந்திய பாரம்பரிய மற்றும் சமகால இசை உட்பட பல்வேறு இசை நிகழ்ச்சிகளை இசைத்து பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர். தமிழ் இளைஞர்களுக்காக, இசைக்குழு எட்டு பிரபலமான தமிழ் பாடல்களையும், அவற்றில் சிங்கப்பெண்ணே, தமிழா தமிழா, பாகுபலி, லியோ, மற்றும் ஹே மின்னலே ஆகியவை நிகழ்வின் சிறப்பம்சமாக இருந்தது. இந்த நிகழ்வில் தலைமை விருந்தினராக இந்திய கடற்படையின் ஆயுத படை தலைமை இயக்குநர் ரியர் அட்மிரல் ரூபக் பருவா, சீனிவாச இராமனுஜன் மைய புல தலைவர் வி.ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படைப் பகுதியின் கொடி ஆபிசர் கமாண்டிங் ரியர் அட்மிரல் சதீஷ் ஷெனாய் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். சாஸ்த்ரா பல்கலைக்கழக துணை வேந்தர் வைத்யசுப்ரமணியம் மற்றும் திட்டம் மற்றும் வளர்ச்சி புல தலைவர் ம. சுவாமிநாதன் உள்பட மாணவ மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.