அறந்தாங்கி, ஆக.17 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஐடியல் கல்வி குழு மத்தில் 78 ஆவது சுதந்திர தின விழா நடைபெற்றது. ஐடி யல் கல்வி குழு மத்தின் தாளாளர் பீ.சேக் சுல்தான் வர வேற்றார். 11 ஆவது வார்டு உறுப்பினர் காசிநாதன் மற்றும் பள்ளி யின் இயக்குநர்கள் மாணிக்கம், பிரபாகர் தலைமை வகித்தனர். விழாவின் சிறப்பு விருந்தினர் நூறு வயதை கடந்த சுதந்திரப் போராட்ட வீரர் வீரப்பன், தேசிய கொடியை ஏற்றி, விடுதலைப் போரில் அவருடைய அனுபவங்களை மாணவர்களிடையே பகிர்ந்தார். பள்ளி முதல்வர் முத்துக்குமார் நன்றி கூறினார்.