திருச்சி, ஜூன் 8-
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 1178 கன அடி என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் லேசான மழை காரணமாக வியாழனன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு, விநாடிக்கு 715 கன அடியிலிருந்து 1178 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவை விட அணைக்கு வரும் நீரின் அளவு குறைவாக இருப்ப தால் இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 103.63 அடி யிலிருந்து 103.59 அடியாக குறைந்துள்ளது. அணையிலி ருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 69.57 டிஎம்சி-யாக உள்ளது.