districts

காய்கறி விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் மாதர் சங்கம் ஆட்சியரிடம் மனு

தஞ்சாவூர், ஜூலை 13-  

     தமிழக அரசு அத்தியாவசியப் பொருட்களான தக் காளி, வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் உள்ளிட்ட காய்கறி பொருட்களை குறைந்த விலையில், ரேஷன் கடைகள் மற்றும் நடமாடும் காய்கறி கடைகள் மூலம்  தஞ்சாவூர் மாவட்டத்தில் விநியோகம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம், மாதர் சங்க  மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.கலைச்செல்வி, மாவட்டத்  துணைத் தலைவர் எஸ்.வனரோஜா, மாவட்டக்குழு உறுப்பினர் பி.புனிதா, எம்.மாலதி, எஸ்.மாரியம்மாள், கேமதுமிதா ஆகியோர் மனு அளித்தனர்.