அறந்தாங்கி, டிச.16 - புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் தாலுகா காவதுகுடி ஊராட்சியில் உள்ள தனிகொண்டான் - பட்டமங்கலம் செல்லும் 2 கிலோ மீட்டர் சாலையை சரிசெய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி ரூ.99 லட்சம் மதிப்பில், நபார்டு திட்டத்தின்கீழ் இந்த சாலைப் பணிகளை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். இதில் ஆவுடையார்கோவில் ஒன்றிய பெருந்தலைவர் உமாதேவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.