தஞ்சாவூர், ஆக.24 - தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம், முடச்சிக்காடு ஊராட்சி, பூக் கொல்லை ஆதிசக்தி விநாயகர் கோயில் விழா மேடை ரூ.10.5 லட்சம் மதிப்பீட்டிலும், பள்ளத்தூர் ஊராட்சி கதலிவனேஸ்வரர் கோயில் விழா மேடை ரூ.10 லட்சம் மதிப்பீட் டிலும், ஆண்டிக்காடு ஊராட்சி பொது விநி யோகத் திட்ட கட்டடம் ரூ.9.18 லட்சம் மதிப்பீட் டிலும் என மொத்தம் ரூ.29 லட்சத்து 23 ஆயி ரம் மதிப்பீட்டில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதனை, சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மு.கி.முத்துமாணிக் கம் முன்னிலையில், பேராவூரணி சட்டப்பே ரவை உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து, திறந்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். நிகழ்வில், ஆண்டிக்காடு ஊராட்சியில் குடும்ப அட்டை தாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.