மயிலாடுதுறை, பிப்.10 - மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார் கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட திருக்களாச்சேரி, எடுத்துக்கட்டி, சாத்தனூர், திருவிடைக்கழி, ஈச்சங்குடி உள்ளிட்ட ஊராட்சிகளில் பல்வேறு கட்டிடங்களின் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளுக்கு ஒன்றிய பெருந்த லைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர்கள் பைலட், சம்ஷாத் ரபீக், நாகராஜன், புஷ்பமேரி உதய குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருக்களாச்சேரி ஊராட்சி பெரியகூத் தூர், எடுத்துக்கட்டி, சாத்தனூர், பூதனூர் ஆகிய இடங்களில் புதிய பேருந்து நிறுத் தங்களையும், திரு விடைக்கழியில் ஊராட்சி மன்ற புதிய அலுவலகத்தையும், ஈச்சங்குடி ஊராட்சி கட லியில் குடிநீர் டேங்க் மற்றும் சிமெண்ட் சாலையையும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பி னர் நிவேதா எம்.முருகன் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து சிறப்பு ரையாற்றினார். மாவட்ட கவுன்சிலர் ராஃபியா நர்கீஸ் பானு அப்துல் மாலிக், வட்டார வளர்ச்சி அலு வலர்கள், துணை பெருந்தலைவர் மைனர் பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.