மயிலாடுதுறை, ஜூலை 12-
மயிலாடுதுறையில் தமிழ்நாடு எலக்ட்ரிக்கல் தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு) கிளை துவக்க பேரவை செவ்வா யன்று மாலை நடைபெற்றது.
மின் ஊழியர் மத்திய அமைப்பின் நாகை கிளை செயலாளர் எம்.கலைச்செல்வன் தலைமை வகித்தார். மத்திய அமைப்பின் நாகை மாவட்டப் பொருளாளர் எம்.கண் ணன், சிஐடியு மாவட்டத் தலைவர் ஆர். ரவீந்திரன், மாவட்டச் செயலாளர் ப.மாரி யப்பன், உழைக்கும் பெண்கள் கன்வீனர் டி.பரிமளா, மின் ஊழியர் மத்திய அமைப் பின் திட்ட இணைச் செயலாளர் ஜி.இளவர சன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
அமைப் பின் பொதுச் செயலாளர் எஸ்.எஸ் சுப்பிர மணியன் அமைப்பின் முக்கியத்துவம் பற்றி பேசினார். எலக்ட்ரிக்கல் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக கே.ரமேஷ், செயலாளராக ஆர்.தியாகராஜன், பொருளாளராக எம்.கலைச்செல்வன், துணைத் தலைவராக இளவரசன் தேர்வு செய்யப்பட்டனர்.
எலக்ட்ரிக்கல் தொழிலாளருக்கு தனியான நலவாரியம் அமைக்க வேண்டும். ஆய்வு உரிமம் சான்றிதழுக்கு மனு அளித்த அனைவருக்கும் உரிமம் சான்றிதழ் வழங்க வேண்டும். பணியிட பாதுகாப்பு, விபத்தில் இறந்தவரின் வாரிசுகளுக்கு ரூ.3 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.