அரியலூர், டிச.26 - உடையார்பாளையம் பேரூராட்சியில் ரூ.95.11 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை ஜெயங் கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் தொடங்கி வைத்தார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த உடையார்பாளையம் பேரூராட்சி வார்டு எண். 14-ல், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2022 - 2023கீழ், ரூ.18 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலைக் கடை கட்டிடத்தை திறந்து வைத்தார். மேலும், வார்டு எண் 11-இல், ரூ.17.71 லட்சத்தில், புதிய அங்கன்வாடி கட்டிட கட்டுமான பணி, வார்டு எண் 8-ல், ரூ. 8.20 லட்சத்தில் பட்டத்து மாரியம்மன் கோவில் தெருவில், பேவர் பிளாக் சாலை அமைத்தல், வார்டு எண்:7-ல், ரூ.2 லட்சத்தில், மருத்துவர் தெருவில், சிறு பாலம் அமைத்தல், வார்டு எண்:8-ல், ரூ.2 லட்சத்தில், சேர்வைக்காரத் தெருவில், சிறு பாலம் அமைத்தல், வார்டு: 14-ல் எஸ்எப்சி திட்டத்தில், ரூ.17 லட்சத்தில் மூர்த்தியான் தெருவில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், வார்டு எண்: 15-ல் ரூ.10 லட்சத்தில் தெற்கு தெருவில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், வார்டு எண்:11-ல் ரூ.10 லட்சத்தில் புது தெருவில் பேவர் பிளாக் சாலை அமைத்தல் உட்பட பல்வேறு திட்ட பணி களை எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உடையார்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன், உடையார்பாளையம் பேரூராட்சி தலைவர் மலர்விழி ரஞ்சித்குமார் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.