districts

img

உதகையில் 134, 135 ஆவது நாய்கள் கண்காட்சி துவக்கம்

உதகை, மே 12- உதகை தென்னிந்திய கென்னல் கிளப் சார்பில், 134 மற்றும்  135 ஆவது நாய்கள் கண்காட்சி தொடங்கியது. தென்னிந்திய கெனல் கிளப் சார்பில் 134 மற்றும் 135  ஆவது நாய்கள் கண்காட்சி உதகை அரசு கலைக்கல்லூரி  மைதானத்தில் ஞாயிறன்று துவங்கியது. இக்கண்காட்சியில் ஹோண்டு, லேப்ரடார், ஜெர்மர் ஷேப்பர்டு, டாஸ்ஹவுண்ட், கோல்டன் ரீட்டிவர், கிரே டேன், பீகிள், பூடுல் உள்ளிட்ட 52  ரகங்களில் 450க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்றன. முதல்  நிகழ்வாக நாய்களின் கீழ் படிதல் போட்டியுடன் கண்காட்சி  நடைபெற்றது. அதனைத்தொடந்து, டாஸ்ஹவுண்ட், கோல் டன் ரீட்டிவர், கிரே டேன் ரக நாய்களின் சிறப்பு கண்காட்சி  நடைபெற்றது. இதில், நாட்டு ரக நாய்களான ராஜபாளை யம், சிப்பிப்பாறை, கோம்பை, கன்னி ஆகிய ரகங்கள் பங் கேற்கின்றன. இக்கண்காட்சியில் குழந்தைகள் முதல் பெரிய வர்கள் வரை தங்கள் செல்லப்பிராணிகளுடன் உற்சாகமாக  கலந்து கொண்டனர். லேசர் ஷோ நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்கா வில் மலர் கண்காட்சி வெள்ளியன்று தொடங்கி நடைபெற்று  வருகிறது. சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் ஒரு  லட்சத்து 20 ஆயிரம் கார்னேஷன் மலர்களைக் கொண்டு  பிரம்மாண்டமாக டிஸ்னி வேர்ல்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்ட நீலகிரி மலை ரயில் மலர்களால் வடிவமைக்கப்பட்டிருந்தது சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்தது. இந்நிலை யில், மலர் கண்காட்சியில் நடப்பாண்டில் முதன் முறையாக  இரவில் “லேசர் லைட் ஷோ” நடத்தப்பட்டது. இதனை சுற்று லாப் பயணிகள் கண்டு ரசித்ததோடு, உற்சாகமாக நடனமாடி  மகிழ்ந்தனர்.