மயிலாடுதுறை, ஆக.6 -
மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் அருகேயுள்ள விசலூர் ஊராட்சியில் புதிய மின்மாற்றி துவக்க விழா நடை பெற்றது.
குறைந்த மின் அழுத்தத்தால் விசலூர் ஊராட்சி கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் சிரமப்பட்டு வந்தனர். புதிய மின் மாற்றி அமைக்க வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், 63 கிலோ வாட் திறன் கொண்ட புதிய மின்மாற்றி அமைக்கப் பட்டது. இதன் துவக்க நிகழ்ச்சியில், பூம்புகார் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் நிவேதா எம்.முருகன் புதிய மின் மாற்றிய தொடங்கி வைத்து பேசினார். இதில் ஊராட்சி மன்றத் தலைவர் அனுசுயா இளையராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.