தஞ்சாவூர், ஜூலை 31-
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பெரியகுளம் ஏரியில் உள்ள பயன்பாட்டில் இல்லாத மின் கம்பங்களை அகற்ற வேண்டும் என விவ சாயிகள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
பேராவூரணி நகர் மக்க ளின் முக்கிய நீராதாரமான பெரியகுளம் ஏரி 564 ஏக்கர் நிலப் பரப்பளவில் அமைந் துள்ளது. மேலும் பேராவூ ரணி, செங்கமங்கலம், அம் மையாண்டி, மாவடுக் குறிச்சி, பழைய நகரம் பொன்னாங்கண்ணிக்காடு என10க்கும் மேற்பட்ட கிரா மங்களில் சுமார் 5,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வந்ததோடு, நிலத்தடி நீர்மட் டம் உயரவும் காரணமாக இருந்து வருகிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் 16 அன்று வீசிய கஜா புயல் கோரத்தாண்டவத்தில் மின்கம்பங்கள் முறிந்து, கீழே விழுந்தது. இதை சரி செய்வது மின்சாரத் துறை யினருக்கு பெரும் சவாலாக இருந்தது. 4 கி.மீ தூரத்தில் உள்ள செங்கமங்கலம் கிரா மத்தில் இருந்து பேராவூரணி நகர் பகுதிக்கு மின்சாரம் கொடுப்பதற்காக மின்சா ரத்துறையினர் பெரும் முயற்சி எடுத்து, சாலை மற்றும் விவசாய நிலங்கள் என இரண்டு வழியாகவும், மின்கம்பங்களை பதிக்கும் பணிகளை தொடங்கினர்.
சாலை வழியாக பணிகள் முடிந்த நிலையில் பேராவூ ரணி நகர் பகுதிக்கு 5 நாட்க ளில் மின்சாரம் மின் விநியோ கம் வழங்கப்பட்டது.
இதற்காக செங்கமங்க லம் துணை மின் நிலையம் தொடங்கி விவசாய நிலங் கள், பெரியகுளம் ஏரி வழி யாக 50-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் பதித்து வைத்து மின்கம்பி பொருத்தப்படா மல் தற்போது வரை உள் ளது. எனவே விவசாயிகள் மின்சாரத்துறையின் பேராவூ ரணி பெரியகுளம் ஏரியில் உள்ள பயன்பாட்டில் இல் லாத மின்கம்பங்களை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.