திருச்சி மாவட்டத்தில், தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில், தமிழ் ஆட்சிமொழி ஒருவார காலம் நடைபெற உள்ளது. இதன் ஒரு பகுதியாக காந்தி சந்தை காவல் நிலையம் அருகில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் செவ்வாயன்று தொடங்கிவைத்தார்.