districts

திருச்சி மாநகராட்சி வார்டுகளில் விளையாட்டு மைதானம் அமைத்திடுக! வாலிபர் சங்கம் வலியுறுத்தல்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 18 - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட காட்டூர் பகுதி குழு 2-வது மாநாடு ஞாயிறன்று நடைபெற்றது. மாநாட்டை மாநகர் மாவட்டத் தலைவர் எஸ்.சுரேஷ் துவக்கி வைத்தார். மாநாட்டில் முன்னாள் தலைவர்கள் கனல்கண்ணன், ஜாகிர் உசேன், மணிமாறன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  பிஎச்இஎல், துப்பாக்கி தொழிற்சாலை, ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவ னங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட்டு, புதிய வேலைவாய்ப்புகளை உரு வாக்கி உள்ளூர் இளைஞர்களுக்கு பணி யில் முன்னுரிமை வழங்க வேண்டும். ஆமை  வேகத்தில் நடைபெற்று வரும் பாதாளச் சாக்கடை திட்டத்தையும் புதிய கூட்டு குடிநீர்  திட்டத்தையும் விரைவாக செயல்படுத்தி மக்கள்  பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மாநகராட்சி வார்டுகளில் விளையாட்டு மைதானமும், உடற்பயிற்சி கூடமும் அமைக்க வேண்டும். அரியமங்கலம் குப்பை கிடங்கில் குப்பை கொட்டுவதை நிறுத்தி, அதை இடம் மாற்றம் செய்ய வேண்டும். திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் அதி வேக விரைவு ரயில்களை நிறுத்த வேண்டும்.  திருவெறும்பூர் தலைநகரில் அனைத்து  அரசு அலுவலகங்களையும் ஒன்றிணைக் கும் வகையில் ஒருங்கிணைந்த வளாகம்  அமைக்க வேண்டும். தாலுகா நீதிமன்றம்,  தீயணைப்பு நிலையத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்பன உள்பட  பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  மாநகர் மாவட்டச் செயலாளர் லெனின்  பகுதி நிர்வாகிகளை அறிமுகம் செய்து நிறை வுரையாற்றினார். காட்டூர் பகுதி குழுவின்  தலைவராக நவநீதகிருஷ்ணன், செயலாள ராக சந்தோஷ்குமார், பொருளாளராக திரா விடமணி, துணைத் தலைவர்களாக ஆதம்தீன், சுபாஷ்சந்திரபோஸ், துணைச் செயலாளர்களாக சாதிக் பாட்சா, நிவேதா, ரிச்சர்ட் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பகுதி குழு உறுப்பினர்களாக யுவராஜ், தவ்பிக், பாண்டியன் இதயத்துல்லா, பாதுசா, சத்யா, தேசிகன், சேட்டு ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர்.