districts

திருச்சி மாநகராட்சியில் வீடுகளுக்கே சென்று பழைய பொருட்களை வாங்கும் திட்டம் துவக்கம்

திருச்சிராப்பள்ளி,  மே 17 - திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி களில் நேரடியாக வீடுகளுக்கு சென்று பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள்,  இதர பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட பொருட் கள், இரும்பு, அலுமினியம் எவர்சில்வர் பழைய எலக்ட்ரானிக் சாதனங்கள் என அனைத் தையும் நேரடியாக வாங்கும் புதிய திட்டத்தை  திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் வீடுகளில் சேரக்  கூடிய அனைத்து உபயோகமற்ற பொருட் களையும் பணமாக்கும் ஒரு புதிய திட்டத்தை  ‘தி மணி பின்’ என்ற நிறுவனத்தோடு சேர்ந்து செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. வீடுகள்தோறும் சென்று சேகரிக்கக்  கூடிய ஒவ்வொரு கிலோ பழைய பொருட்களுக் கும் ரூ.12 வீதம் நிர்ணயிக்கப்பட்டு வீட்டின்  உரிமையாளர்களுக்கு கொடுக்க திட்டமிடப் பட்டுள்ளது. இந்த பணியில் மகளிர் சுய  உதவி குழுக்கள் ஈடுபட உள்ளனர். எனவே  முதல் கட்டமாக மாநகராட்சி மேயர் அன்பழக னின் வார்டான 27வது வார்டில் இந்த பணி கள் துவங்கப்பட்டன. பின்னர் மேயர் அன்பழ கன் பேசுகையில், இந்த பணியை எனது வார்டில் தொடங்கி தூய்மை வார்டாக மாற்ற  உள்ளோம். இதே போன்று 65 வார்டையும் தூய்மை வார்டுகளாக மாற்றுவோம் என்றார்.  இந்த திட்ட தொடக்க விழாவில் கோ-அபி ஷேகபுர கோட்ட உதவி ஆணையர் செல்வ பாலாஜி, கோட்டத்தலைவர் விஜயலட்சுமி கண்ணன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், சுகாதார துறை அதிகாரிகள், மகளிர் சுய உதவி குழுக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;