districts

img

திருத்துறைப்பூண்டியில் ரூ.2.25 லட்சம் கட்சி நிதி அளிப்பு

திருத்துறைப்பூண்டி, மார்ச் 6-  திருத்துறைப்பூண்டி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வடக்கு ஒன்றியக் குழு சார்பில் கட்சி நிதி கோட்டாவை முடிக்கும் நிகழ்ச்சி ஞாயிறன்று கச்சனம் அலுவலகத்தில் ஒன்றியச் செய லாளர் வி.டி.கதிரேசன் தலைமை யில் நடைபெற்றது.  ஒன்றியத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூ.2.25 லட்சத்தை மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கே.என்.முருகானந்தம், கே. தமிழ்மணி முன்னிலையில், மாவட்ட செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தியிடம் ஒப்படைக்கப் பட்டது. இந்நிகழ்ச்சியில், ஒன்றி யக் குழு உறுப்பினர்கள் பால குரு, சேகர், மாதவவேலன், சிவ குமார் உள்ளிட்டோர் உடனிருந்த னர்.