தஞ்சாவூர், ஜூலை 13-
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவா சத்திரம் ஒன்றியம், சொக்கநாதபுரம் ஊராட்சியில் முதலமைச்சர் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ஆயன்தாக்கு-ஒளிராமன் காடு இணைப்புச் சாலை ரூபாய் 34 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கப்படுகிறது.
அதே போல், சேது பாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம், திரு வத்தேவன் ஊராட்சி சோமநாதன்பட்டினம் கடற்கரை சாலை ரூபாய் 41.18 லட்சம் மதிப் பீட்டில் அமைக்கப்படுகிறது. இந்த இரண்டு பணிகளையும் பேராவூ ரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.
நிகழ்வில், வட்டார வளர்ச்சி அலுவலர் சடையப்பன், சேதுபாவாசத்திரம் ஒன்றியப் பெருந்தலைவர் மு.கி. முத்துமாணிக்கம், முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவர் ராஜ ரெத்தினம், திமுக மாவட்ட அவை தலை வர் சுப.சேகர், சேதுபாவாசத்திரம் தெற்கு திமுக ஒன்றியச் செயலாளர் வை.ரவிச்சந்தி ரன், மாவட்ட பிரதிநிதி பூவாணம் ஞானப் பிரகாசம், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பாமா செந்தில், சுதாகர், ஊராட்சி மன்றத் தலைவர்கள் ராம் பிரசாத் (சொக்க நாதபுரம்), முரளி (திருவத்தேவன்) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.