தஞ்சாவூர், ஜூலை 24-
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டத்துக்கு உட்பட்ட விஸ்வநாதபுரம் பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்த வர் கூலித் தொழிலாளி மேகராஜ் (32). இவரது மனைவி குடும்ப பிரச்சனை காரணமாக கோபித்துக் கொண்டு குழந்தையுடன் தந்தை வீட்டுக்குச் சென்றார்.
மனைவியை சமாதானம் செய்வதற்காக மேகராஜ் அண்மையில் அவரது வீட்டுக்குச் சென்றார். அங்கு மேக ராஜை மனைவியின் பெற்றோர், உறவினர்கள் அடித்து விரட்டினராம். இதுகுறித்து நாச்சியார்கோவில் காவல் நிலையத்தில் மேகராஜ் புகார் செய்தார். இவரது புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல், இவரை காவல்துறையினர் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதனால் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை மேகராஜ், தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதைப் பார்த்த காவல்துறையினர் விரைந்து வந்து மேகராஜை மீட்டனர். பின்னர் அவரை, விசாரணைக்காக தமிழ் பல்க லைக்கழக காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்ற னர்.