புதுக்கோட்டை, ஆக.27-
புதுக்கோட்டை மாவட்ட சிறையில் சனிக்கிழமை நடைபெற்ற சிறை மக்கள் நீதிமன்றத்தில் 31 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு, 6 சிறைவாசிகள் விடுவிக்கப்பட் டனர்.
புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சிறை மக்கள் நீதிமன்றம் (ஜெயில் லோக் அதாலத்) சனிக்கிழமை நடைபெற்றது. சட்டப்பணிகள் ஆணைக் குழு வின் செயலர் ராஜேந்திர கண்ணன் தலைமையில், தலை மைக் குற்றவியல் நீதிபதி சசிகுமார், குற்றவியல் நடுவர் மன்ற எண்.1 நீதிபதி ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்த னர்.
தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை நீதிபதிகளும் கலந்து கொண்டு வழக்குகளை நடத்தினர். இதில், புதுக் கோட்டை மாவட்ட சிறை மற்றும் மாவட்டத்திலுள்ள கிளை சிறைகளைச் சேர்ந்த சிறைவாசிகளின் 31 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. இதில் 6 சிறைவாசிகளை விடு விக்கவும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.