districts

img

கட்டணம் என்ற பெயரில் வசூல் வேட்டையில் ஈடுபடும் திருக்கடையூர் ஆலய நிர்வாகம்

முறைகேடுகளை சரி செய்ய அனைத்துக் கட்சியினர் கோரிக்கை

மயிலாடுதுறை, ஏப்.29-  

   மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடை யூரில் அமைந்துள்ள  ஸ்ரீ அபிராமி அம்மன்  சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் ஆலயத் திற்கு வரும் பக்தர்களிடமும், கோயிலை சுற்றியுள்ள வணிக நிறுவனங்களிடமும் அநியாய கட்டணங்களை வசூலிப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வந்ததை யடுத்து முறைகேடுகளை தடுக்க வேண்டு மென வலியுறுத்தியும், பல்வேறு கோரிக் கைகளை முன்வைத்தும் திருக்கடை யூரைச் சேர்ந்த அனைத்து கிராம பொது மக்கள் மற்றும் அனைத்துக் கட்சியினை சேர்ந்த பிரதிநிதிகள் வெள்ளியன்று ஆலய கண்காணிப்பாளரிடம் மனு அளித் தனர்.  

  அந்த மனுவில், ‘‘சுமார் 1000 ஆண்டு கள் பழமையான ஸ்ரீஅபிராமி அம்மன்  சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் ஆலயத் திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளி லிருந்து வந்து செல்கின்றனர். கோவிலில்  தினமும் நூற்றுக்கணக்கான ஆயுஷ்ய ஹோமம், மணிவிழா, சதாபிஷேகம் போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன.  

  மணிவிழாவிற்கு இதுநாள் வரை கோவில் கட்டணமாக ரூ.1126/- ஆயிரத்து  நூற்று இருபத்தி ஆறு உள் மண்டபத்திற் காகவும், நூற்றுக்கால் மண்டபத்தில் ஏழைகள் பயன்பெறும் வகையில் ரூ. 500/- ஐநூறுமாக வசூலிக்கப்பட்டது. பிறகு கூடு தலாக உயர்த்தி ரூ.2000/-ஆக வசூலிக் கப்பட்டது. தற்போது மேலும் ரூ.2000/-ம்  உயர்த்தி கோவில் கட்டணமாக ரூ.4000/-  வசூலிக்கப்படுகிறது.  

   ஆனால் கோவில் நிர்வாகமோ ரூ.2000 /-த்திற்கு மட்டுமே இரசீது வழங்குகிறது. மீதமுள்ள ரூ.2000-த்திற்கு எந்தவித இரசீ தும் வழங்குவது இல்லை. இவ்வளவு தொகைகள் வாங்கியும் நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு முறையான கழிப் பறை மற்றும் சுகாதார வசதிகளோ, உடை  மாற்றும் வசதியோ சரியான முறையில் செய்து தரப்படவில்லை.

   மேலும் கோவில் வாசலில் உள்ள தரை கடைகளுக்கு இதுநாள் வரை இல்லாத  வாடகையாக நாள் ஒன்றுக்கு ரூ.100 வசூ லிப்பதை அனுமதிக்கக் கூடாது. அதே போன்று  கோவிலுக்கு வரும் பக்தர்களின் காலணிகளை பாதுகாப்பதற்கு கோவில் நிர்வாகத்தினரால் நியமிக்கப்பட்டுள்ள நபர் ஒரு ஜோடி காலணிக்கு ரூ.10/-வசூல்  செய்கிறார். இது மிகவும் அதிகபட்ச தொகையாகும்.

  அரசு உத்தரவோ கோவில் நிர்வாகம்  காலணிகள் பாதுகாப்பதற்கு கட்டணம் ஏதும் வசூல் செய்யக் கூடாது என்று கூறு கிறது. அந்த காலணி பாதுகாப்பகத்தை தற்போது உள்ள நபர் பெட்டிக் கடையாக  மாற்றி அதில் மனிதர்கள் உண்ணக்கூடிய  தானிய வகைகளையும் விற்பனை செய்து  வருகிறார். அதனை உடனடியாக தடை செய்ய வேண்டும்.

  கோவிலுக்குச் சொந்தமான இடத்தில்  காலங்காலமாக குடியிருக்கும் ஏழை,  எளியவர்களுக்கு மின் இணைப்பு பெறுவ தற்கும், அரசு வீடு கட்டுவதற்கும் தடை யில்லாச் சான்றினை எந்தவிதமான கட்ட ணமும் இல்லாமல் வழங்கிட வேண்டும்.

  கோயிலில் காலியாக உள்ள பணி யிடங்களில் உள்ளூர் நபர்களையே பணி களில் அமர்த்த வேண்டும். கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு சாதாரண உடல்நலக்குறைவு ஏற்பட்டால் கூட  சிகிச்சையளிக்க போதுமான வசதிகளு டன் மருத்துவமனை இல்லை. எனவே, கோ வில் நிர்வாகம் சார்பில் திருக்கடையூரில் நல்ல சுகாதார வசதியுடன் கூடிய பல் நோக்கு மருத்துவமனை அமைக்க வேண்டும். கோயில் நிர்வாகத்தின் சார்பில் அபி ராமி அம்மன் பெயரில் ஏழை, எளிய மக்கள் மற்றும் பக்தர்கள் பயன்பெறும் வகையில் புதிதாக திருமண மண்டபம் கட்டி குறைந்த வாடகைக்கு வழங்க வழி வகை செய்ய வேண்டும்.

  நூற்றுக்கால் மண்டபத்தில் மணி விழா வைபோகம் நடத்துவதற்கு தற்போது  நான்கு பூஜைகள் செய்வதற்கு மட்டும் வழி வகை செய்து அதற்காக ரூ.1,00,000/- வரை கோயில் கட்டணமாக அநியாய வசூல் செய்யப்படுவதாகவும், ரூ.500/- கோயில் கட்டணமாக செலுத்தி ஏழைகள் பயன்படும் வகையில் முன்பு இருந்ததை போல் மாற்றி அமைக்க வேண்டும்.

  கோவிலில் தற்போது புதிய நிர்வாகி களை அமைத்து ஆலய நிர்வாகத்தை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொள்வதை நிர்வாகம் உடனடியாக தடை  செய்திட வேண்டும். கோயிலில் இதுநாள்  வரை நடைமுறையில் இல்லாத வருடாந் திர உற்சவத்திற்கு உபயதாரர்கள் பலர் இருந்தும் கோயில் நிர்வாகத்தினர் வணிக  நிறுவனங்களில் சிறப்பு நன்கொடை யாக வசூல் செய்து  அவப்பெயரை உண் டாக்கும் செயலை தடுத்திட வேண்டும்’’ என மனுவில் கூறப்பட்டுள்ளது.

  மனுவினை அளித்தபோது, அனைத் துக்கட்சி பிரமுகர்களிடம் கண்காணிப்பா ளர் முரண்பாடாக பேசியதால் வாக்கு வாதம் ஏற்பட்டது.  

   இதையடுத்து தருமபுரம் ஆதீனத்தி டம் மனு குறித்து பேசி சந்திப்பு கூட்டத் திற்கு ஏற்பாடு செய்வதாக ஆலய நிர்வா கிகள் உத்தரவாதம் அளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.  

   ஆலய நிர்வாக சீர்கேடுகளை கண்டித் தும், பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டும்  திருக்கடையூர் அமிர்தகடேஷ்வரர் ஆலயத் தில் பக்தர்களுக்கு தேவையான அடிப் படை வசதிகளை செய்துத் தரக் கோரி யும், கோயில் திருவிழாக்களை சுற்றி யுள்ள கிராம மக்களுக்கு தெரியாம லேயே நடத்துவதைக் கண்டித்தும், கோயில் பணிகளில் உள்ளூர் வாசி களுக்கு வேலைத்தர வேண்டியும் மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் வாலிபர் சங்க மும் தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங் களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.