districts

அணுகு சாலை அமைக்கும் பகுதியில் கட்டடம் கட்ட அனுமதிப்பது நீதிமன்ற மீறல்

திருச்சிராப்பள்ளி, ஆக.22 -

     அணுகு சாலை அமைக்கும் பகுதியில் கட்டடம் கட்ட அனுமதிப்பது நீதிமன்ற மீறலா கும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரி வித்துள்ளது.

      இதுகுறித்து கட்சியின் திருச்சி மாநகர்  மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜா வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    திருச்சி பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரையிலான திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மனித உயிர்கள் பலியாகின்றன.

    இதனை தடுக்க 14.5 கி.மீ தூரத்திற்கு சாலையின் இருபுறமும் அணுகு சாலை (சர்வீஸ் ரோடு) அமைத்திட வேண்டும் என  வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சிகளும்,  பொதுநல அமைப்புகளும் கடந்த 16 ஆண்டு களாகப் போராடி வருகின்றன.

    இந்நிலையில் கடந்த 8.8.2023 அன்று மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அமைச் சர்கள் கே.என் நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், 6 மாதத் திற்குள் அணுகு சாலை அமைக்க நடவ டிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட் டது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

    மேற்கண்ட அணுகு சாலை அமைக்கும் விவகாரத்தில் அப்பகுதியைச் சேர்ந்த வியா பாரிகள் மூன்று பேர் 4.2.2021 அன்று மதுரை உயர் நீதிமன்றத்தில் அணுகு சாலை  மீட்புக் குழு சார்பில் 15.10.2019 அன்று மதுரை  உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொடுத்த, 6 மாதத்தில் அணுகு சாலை அமைக்க வேண்டும் என்ற உத்தரவை மறைத்து  மதுரை உயர்நீதிமன்றத்தில் 4.2.2021-ல் Statasquo order பெற்றிருக்கிறார்கள். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக மேற்கண்ட மூன்று வியாபாரிகள் பெற்ற உத்த ரவை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பல உயிர்கள் பலியாவதை தடுக்கும் அணுகு சாலை (சர்வீஸ் சாலை) அமைக்கா மல் சட்டத்திற்கு புறம்பாக சாலை அமைத்து  அதில் சுங்க கட்டணம் வசூல் செய்வதை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.

    மதுரை உயர் நீதிமன்றம் 15.10.2019ல் உத்தரவிட்ட பிறகு, கட்டிடங்களில் அளவீடு செய்து குறியிட்டு, சாலையின் இருபுறமும் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு, திருச்சி மாநகராட்சி தொடர்ந்து அனுமதி வழங்கி வருவது நீதிமன்ற உத்தரவை மீறிய செய லாகும். எனவே உடனடியாக மாநகராட்சி இக்காலத்தில் வழங்கிய கட்டிட அனுமதியை  ரத்து செய்வதோடு புதிய அனுமதி வழங்கு வதை நிறுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.  

   இவ்வாறு அவர் கூறியுள்ளார்.