தஞ்சாவூர், ஆக.3-
தஞ்சாவூரில் கீழடியை விட பழைமையான சுவடுகள் இருக்கின் றன என்றார் வரலாற்று ஆய்வாளர் கோ.தெய்வநாயகம்.
தஞ்சாவூரில் சோழ மண்டல வர லாற்றுத் தேடல் குழு, தஞ்சாவூர் தமிழ்ச் சங்கம் சார்பில் சார்பில் வியா ழக்கிழமை நடைபெற்ற மாமன்னர் ராஜராஜ சோழரின் 1038-ஆவது முடி சூட்டு விழாவில் அவர் பேசியது:
இந்தியாவிலேயே மிகப் பெரிய டெல்டாவாக காவிரி டெல்டா போற் றப்படுகிறது. இங்கு மொத்தம் 39 ஆறுகள் ஓடுகின்றன. தவிர, கிளை வாய்க்கால்கள், ஓடைகள், கன்னி வாய்க்கால்கள் போன்றவை ஆயி ரக்கணக்கில் உள்ளன. அக்காலத் தில் எப்படியெல்லாம் பாசன வசதி களை ஏற்படுத்தியுள்ளனர் என்ப தைப் பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது.
மக்களின் உடல் நலம், மன நலம், கலை வளம், கலைச்செல்வங்கள் ஆகியவற்றில் மனம் நிறையும் போது, படைப்பாற்றல் தானாகவே வளரும். அவ்வளவு பெரிய படைப் பாற்றலை இந்தச் சமவெளி உரு வாக்கித் தந்தது. இதற்குச் சொந் தக்காரர்கள் நாம்.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 1981-ஆம் ஆண்டு முதல் துணை வேந்தராகப் பொறுப்பேற்ற வ.அய். சுப்பிரமணியம் காலத்தில் ஊராய் வுத் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் தஞ்சாவூரில் 1982-ஆம் ஆண்டில் இருபது உறை கிணறு களைக் கண்டறிந்தோம். தஞ்சாவூ ரில் இன்னும் நிறைய உறை கிணறு கள் உள்ளன. கீழடியை விட மிகப் பழைமையான சுவடுகள் தஞ்சாவூ ரில் இருக்கின்றன.
இந்த மண்ணின் மீது மேலும், மேலும் வண்டல் மண் படிந்து விட்டது. இதற்கு உதாரணமாக 900 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தாராசுரம் கோவிலின் தரைமட்டம் ஆறு அடி உயரத்துக்கு உயர்ந்து விட்டதைக் கூறலாம். வண்டல் மண் படிவதை ஆராய தொடங்கிவிட்ட அளவுக்கு தூசிப் படிவையும் நாம் ஆய்வு செய்வதில்லை. இதைச் செய்தால் இன்னும் நிறைய தக வல்கள் கிடைக்கும் என்றார் தெய்வ நாயகம்.
இந்த விழாவுக்கு மேயர் சண்.ராமநாதன் தலைமை வகித்தார். இதில், மறைந்த வரலாற்று ஆய்வா ளர் கும்பகோணம் என்.சேதுராமன், தொல்லியல் வரலாற்று ஆய்வாளர் சு.இராஜவேலு, வரலாற்று ஆய்வா ளர் கி.ஸ்ரீதரன் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. சேதுராமனின் விருதை அவரது தம்பி சிவராமன் பெற்றுக் கொண்டார்.
பவுத்த ஆய்வாளர் பா.ஜம்பு லிங்கம், தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறைத் தலைவர் ஆ.துளசேந்திரன், பொறியாளர் செ. இராமநாதன், இந்து சமய அறநிலையத் துறை யின் ஓய்வு பெற்ற செயல் அலு வலர் டி.கோவிந்தராஜ் உள்ளிட்டோர் பேசினர்.
சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழுத் தலைவர் சா.உதய சங்கர், செயற் குழு உறுப்பினர் இரா. கபிலன், பொருளாளர் ஆண்டவர் கனி உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.