தஞ்சாவூர், ஏப்.26-
தேர்தல் காலத்தில் திமுக அளித்த வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், 3500க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்ட னர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், “ 12 மணி நேர தொழிற்சாலைகள் வேலை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், வருவாய் கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். சாலைப் பணியாளர்களின் 41 மாத கால பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறி விக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.கோதண்டபாணி, மாவட்டச் செயலாளர் ரெங்கசாமி, மாவட்டப் பொருளாளர் பாஸ்க ரன், தமிழ்வாணன், முருகன், அஜய்ராஜ், இளங்கோ, தமிழ்மாறன், சங்கர் கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.