districts

img

செம்பனார்கோவில் பாழடைந்த கட்டிடத்தில் இயங்கும் வேளாண்மை விரிவாக்க மையம் அச்சத்துடன் பணியாற்றும் அலுவலர்கள்

மயிலாடுதுறை, பிப்.21 - மயிலாடுதுறை மாவட் டம் செம்பனார்கோவிலில் உள்ள வேளாண்மை விரி வாக்க மையம்  பாழடைந்த கட்டிடத்திலேயே இயங்குவ தால் அங்கு பணியாற்றும் அலுவலர்கள், ஊழியர்கள் அச்சத்திலேயே பணி செய்யும் நிலை நீடிக்கிறது. செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத் தின் பின்புறம் உள்ள மிக வும் பாழடைந்த கட்டிடத்தி லேயே வேளாண்மைத் துறை யின் கீழ் இயங்கும் வேளா ண்மை விரிவாக்க மையம் செயல்பட்டு வருகிறது.  சுற்று வட்டார பகுதி களான பரசலூர், ஆறுபாதி, காளகஸ்தினாதபுரம், திருச் சம்பள்ளி, நடுக்கரை, மேலப் பாதி, முடிகண்டநல்லூர் உள்ளிட்ட ஏராளமான கிரா மங்களிலுள்ள விவசாயிகள் பல்வேறு சேவைகளுக்காக வந்து செல்லும் இந்த மையம்,  கடந்த 1968 இல் கட்டப்பட்டு 54 ஆண்டுகளாக அதே இடத்திலேயே இயங்கி வரு கிறது. அவ்வப்போது பரா மரிப்பு பணிகளை செய்து வந்தாலும் தொடர்ந்து கட்டி டத்தில் மேற்கூரையின் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து  விழுகின்றன. அலுவலகமாக பயன்ப டுத்த தகுதியில்லாத இந்த  கட்டிடம் எப்போது இடிந்து  விழுமோ என்ற அச்சத்தி லேயே பணி செய்யும் அலுவ லர்களின் நலன் கருதி உடன டியாக பழமையான இக்கட்டி டத்தை இடித்து விட்டு புதிய  கட்டிடத்தை கட்டித் தர வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். வேளாண்மைத் துறை அதிகாரிகளின் உயிரைப் பறிக்க காத்திருக்கும் பாழ டைந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதிய அலுவலகம் கட்ட  மாவட்ட ஆட்சியர் நடவ டிக்கை எடுப்பாரா?