districts

img

கவிதை, ஓவியப் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு

திருச்சிராப்பள்ளி, மார்ச் 22 - மகளிர் தினத்தையொட்டி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில்  கல்லூரி மாணவர்களுக்கு இடையே ‘சிங்க பெண்ணே, சிங்க பெண்ணே’ என்ற தலைப்பில் கவிதை போட்டி மற்றும் ஓவியப் போட்டி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண்  ஓட்டலில் திங்களன்று நடைபெற்றது.   போட்டிக்கு கவிஞர் ரத்திகா தலைமை வகித்தார். முதல் 3 இடங் களை பெற்ற மாணவ, மாணவி களுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க  மாநகர செயலாளர் சிவ. வெங்க டேஷ் பரிசுகளையும், மாவட்ட செய லாளர் ரெங்கராஜன் சான்றிதழ் களையும் வழங்கினர். ஆறுதல் பரி சாக நூல்களும், போட்டியில் பங் கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் களும் வழங்கப்பட்டன. முன்னதாக நூலாசிரியரும், கவிஞருமான வெற்றி நிலவன்  எழுதிய அழகு கூடும் முகங்கள் என்ற  சிறுகதை புத்தகத்தை மாநில துணைத் தலைவர் கவிஞர் நந்த லாலா வெளியிட அதனை பாரதி தாசன் பல்கலைக்கழக துணைப் பதிவாளர் சி.வெங்கடேஷ் பெற்றுக் கொண்டார். கவிஞர் வெற்றி நில வன் ஏற்புரையாற்றினார். விழாவில் கல்லூரி மாணவ,  மாணவிகள், கல்லூரி பேராசிரி யர்கள் கலந்து கொண்டனர். முன்ன தாக எழுத்தாளர் சீத்தா வரவேற் றார். முடிவில் மாநகர தலைவர் இளங்குமரன் நன்றி கூறினார்.