பாபநாசம், மே 11-
12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பாபநாசம் பட்டுக் கோட்டை அழகிரி மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் 80 பேர் தேர்வெழுதியதில் 78 பேர் தேர்ச்சி பெற்றனர்.
இதில், எம். ஹரிஹரன் (555) முதலிடமும், எஸ்.ஹரிஹரன் (542) இரண் டாமிடமும், நாகேஸ்வரன் (537) மூன்றாமிடமும் பெற்றனர். இதேபோல், பாபநாசம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவிகள் 239 பேர் தேர்வெழுதியதில் 233 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், தஸ்னிம் பிர்தெளஸ் (573) முதலிடமும், பிரபாவதி (565) இரண்டாமிடமும், புவ னேஸ்வரி (560) மூன்றாமிடமும் பெற்றனர்.
வணிகவிய லில் 3 மாணவிகளும், பொருளாதாரத்தில் 1 மாணவி யும் 100 மதிப்பெண்கள் பெற்றனர். பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாண வர்கள் 122 பேர் தேர்வெழுதில் 103 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில், சையது ஹக்கீம் (492) முதலிடமும், மணிகண்டன் (480) இரண்டாமிடமும், சஞ்சய் (455) மூன்றாமிடமும் பெற்றனர்.