districts

கஞ்சாநகரம் வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் அடகு வைத்த 52 பேரின் நகைகள் மாயம் முறைகேட்டில் ஈடுபட்ட செயலாளர் சஸ்பெண்ட்

மயிலாடுதுறை, ஏப்.13 - மயிலாடுதுறை மாவட் டம் தரங்கம்பாடி வட்டம் கஞ்சாநகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 2016 ஆம்  ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை அடகு வைத்த  52 பேரின் நகைகள் மாய மாகி உள்ளன.  கடந்த ஆண்டு வங்கியில் அடகு வைத்த நகைகள் அரசு அறிவிப்புப்படி தள்ளு படி செய்யப்பட்டு பயனாளி களிடம் நகைகள் திரும்ப தரப்பட்டு வருகின்றன. ஆனால் 2016 முதல் 2018  வரை வங்கியில் அடகு வைத்த 52 பேரின் நகை களை மீட்க, பயனாளிகள் வங்கியை அணுகிய போது,  நகைகளை தராமல் அலைக்கழித்துள்ளனர். வங்கியில் அடகு வைத்த நகைகளை அங்கு பணி யாற்றும் அதிகாரிகள் கையா டல் செய்து முறைகேட்டில் ஈடுபட்டதாக தெரிகிறது.  அடகு வைத்த ரசீது  தங்களிடம் இருக்கும் போது, வங்கியில் நகையை  காணவில்லை என்பதால்  விவசாயிகள் பெரும்  அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ள னர். வங்கியில் ஏற்பட்ட இந்த  மோசடியை அறிந்த, மாவட்ட  துணை பதிவாளர் ராஜேந் திரன் மற்றும் அதிகாரிகள் வங்கியில் ஆய்வு செய்ததை  அறிந்த, பாதிக்கப்பட்ட ஏழை விவசாயிகள் கஞ்சாநக ரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வழங்கும் வங்கி வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், கஞ்சா நகரம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க செய லாளர் பிரதீப் முறைகேட்டில் ஈடுபட்டது உறுதி செய்யப் பட்டதையடுத்து, அவரை  சஸ்பெண்ட் செய்து மாவட்ட  துணை பதிவாளர் ராஜேந் திரன் உத்தரவிட்டுள்ளார். மேலும், அவர் மீது வணிக குற்ற புலனாய்வுத் துறையில் புகார் அளிக்கவுள்ளதாக மாவட்ட துணை பதிவாளர் தெரிவித்துள்ளார்.