குடவாசல், பிப்.11 - நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருவா ரூர் மாவட்டம் குடவாசல் பேரூராட்சியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் - வார்டு 9 போட்டியிடும் வேட்பாளர் எஸ்.வசந்தா, 10 ஆவது வார்டு வேட்பாளர் கே. குணசேகரன், 11 ஆவது வார்டு வேட்பா ளர் கே.மகேஷ் ஆகியோருக்கு உதயசூரி யன் சின்னத்தில் வாக்கு கேட்டு துண்டறிக்கை வழங்கி நடைபயண பிரச்சாரம் நடை பெற்றது. கூட்டாணி வேட்பாளருக்கு வாக்குக் கேட்டு நடைபெற்ற நடைப்பயண பிரச்சார இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி துவக்கி வைத்தார். திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் பா.பிரபாகரன், பேரூர் கழக செயலாளர் ஆர்.முருகேசன், சிபிஎம் ஒன்றிய செயலாளர் ஆர்.லெட்சுமி, மாவட்ட குழு உறுப்பினர் எப்.கெரக்கோரியா மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி பேரூர் கழகத்தினர் கலந்து கொண்டனர். வாக்குச் சேகரிக்க சென்ற இடங்களில் பொதுமக்கள், “திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பா ளர்களுக்குத்தான் எங்களது வாக்கை அளிப்போம்” என உறுதி அளித்தனர்.