அரியலூர், டிச.13- அரியலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக இடைவிடாமல் கன மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையின் காரணமாக டெல்டா பகுதியான திருமானூர், முடிகொண் டான், மஞ்சமேடு, அன்னிமங்கலம், திரு வெங்கனூர், விழுப்பனங்குறிச்சி, சுள்ளங்குடி, கீழக்காவட்டாங்குறிச்சி, தா.பழூர், காசாங்கோட்டை, நடுவலூர் மற்றும் செந்துறை, அயன்தத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள சுமார் 3,000 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின. தொடர்ந்து கனமழை நீடிக்கும் பட்சத்தில், நீரில் மூழ்கியுள்ள நெற்பயிர் கள் அழுகி பாதிக்கக் கூடிய நிலை ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரி வித்துள்ளனர். மேலும் வயல்களில் தேங்கியுள்ள மழைநீரை வடிய வைப்ப தற்கான வடிகால் வாய்க்கால் தூர்வாரப் படவில்லை என்றும், இதன் காரண மாக தண்ணீரை வடிய வைப்பதில் சிக்கல் நீடிப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர். தா.பழூர், ஆண்டிமடம், ஜெயங் கொண்டம், உடையார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், பயிரிடப்பட்டு உள்ள மக்காச்சோளம் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் சாகுபடி செய்த மக்காச்சோள பயிரில் பூச்சித் தாக்குதல் ஏற்பட்டு மகசூல் பாதிக்கும் நிலை ஏற்பட்டது. அந்த பூச்சி தாக்குதலில் இருந்து தப்பிய பயிர்கள், நன்கு வளர்ந்து கதிர்விடும் நிலையில் இருந்தன. ஆனால், தற்போது பெய்து வரும் மழையினால், வயல்களில் தண்ணீர் தேங்கி தண்டுகள் அழுகும் நிலை உள்ளது. இதனால் மகசூல் இன்றி நஷ்டம் ஏற்படும் நிலை உள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ள னர். இது மட்டுமின்றி, மேற்கண்ட பகுதி களில் பயிரிடப்பட்ட பருத்தி, கடலை உள்ளிட்ட பயிர்களும் மழைநீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.