புதுக்கோட்டை, ஆக.10-
ஜெர்மனியில் நடைபெற்ற உயரம் குறைந்தவர்களுக்கான இறகுப் பந்துப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவரை கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை பாராட்டினார்.
உயரம் குறைந்தவர்களுக்கான உலக அளவிலான தடகளப் போட்டி கள் கடந்த ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ஆம் தேதிவரை ஜெர்மனி யில் நடைபெற்றது. இதில் புதுக் கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலு காவிற்கு உட்பட்ட ஒடுகம்பட்டியைச் சேர்ந்த ராஜ்குமார் மகன் பாலசுப்பிர மணியன் (26) உயரம் குறைந்தவர் களுக்கான இறகுப்பந்து ஒற்றையர் பிரிவினருக்கான போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.
மேலும், இவர் இலங்கை, தாய் லாந்து, உகாண்டா, துபாய், ஜெர்மனி உள்ளிட்ட ஐந்து நாடுகளில் நடை பெற்ற போட்டிகளில் ஏழு தங்கப் பதக் கங்களையும், இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும் வென்றுள்ளார். இவரை கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்ன துரை நேரில் அழைத்துப் பாராட்டி னார். இவருடன் மாற்றுத் திறனாளி கள் சங்க மாவட்ட நிர்வாகி சரணவனன் உடன் இருந்தார்.