கரூர், நவ.23- உள்ளாட்சி தினத்தையொட்டி கரூர் மாவட்டத்தில் உள்ள 157 கிராமங்களில் சனிக்கிழமை கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. அதையொட்டி தாந்தோணி ஊராட்சி ஒன்றியம் வெள்ளி யணை ஊராட்சி குமாரபாளை யத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மீ. தங்கவேல் சிறப்பு பார்வையாள ராக கலந்து கொண்டார். கூட்டத்திற்கு வெள்ளியணை ஊராட்சி மன்றத் தலைவர் சுப்பிர மணியன் தலைமை வகித்தார். பாபநாசம் தஞ்சாவூர் மாவட்டம் மெலட்டூர் அருகே கொத்தங்குடி ஊராட்சி, உதாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்றத் தலைவர் பழனி தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் ராதிகா, துணைத் தலை வர் குமார், பள்ளி தலைமை யாசிரியர் பெஞ்சமின் ஜெரால்டு, கிராம நிர்வாக அலுவலர் குண சேகரன், ஊராட்சி செயலர் ஸ்ரீதேவி, வார்டு உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஊராட்சிப் பணியாளர்கள், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் உட்பட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் 121 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடை பெற்றது. இதில் பெரம்பலூர் வட்டம், செங்குணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளா கத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் கலந்து கொண்டார். இதில், செங்குணம் ஊராட்சி தூய்மை பாரத இயக்க திட்டத் தின்கீழ் ‘திறந்தவெளியில் மலம் கழித்தலற்ற ஊராட்சியாக’ அறி விக்கப்பட்டது. முன்னதாக கிராம ஊராட்சிகளில் தங்களை முழுமை யாக ஈடுபடுத்தி சிறப்பாக சேவை புரிந்த 18 தூய்மை காவலர்களுக் கும், ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்ட 3 மகளிர் சுய உதவி குழுக்களுக்கும், பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கிப் பாராட்டினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.தேவ நாதன், செங்குணம் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா கண்ணுசாமி மற்றும் அனைத்து துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண் டனர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை ஒன்றியம், வாராப்பூர் ஊராட்சி, பொன்னங் கன்னிப்பட்டி ஊராட்சியில் நடை பெற்ற கிராம சபைக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் மு.அருணா பங்கேற்றார். மாவட்டத்தில் உள்ள 497 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டது. இக்கிராம சபைக் கூட்டத்தின் மூல மாக பொதுமக்களின் கோரிக்கை களான சாலை வசதி, சுகாதார வசதி, மின் வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உரிய காலத்திற்குள் நிறைவேற்றிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகிறது. இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி யில் சிறப்பாக பணிபுரிந்த ஊழி யர்களை சிறப்பித்தல், கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல் பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களை கௌர வித்தல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், கிராம வளர்ச்சித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சி திட்டம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் குறித்து விவா திக்கப்பட்டது என ஆட்சியர் தெரி வித்தார். மயிலாடுதுறை மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் வட்டாரம், ஆச்சாள் புரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஷ்வரி சங்கர், கொள்ளிடம் ஒன்றியக்குழுத் தலைவர் ஜெய பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகிக்க, ஆச்சாள்புரம் ஊராட்சி மன்ற தலைவர் வினோஷா கருணா கரன் தலைமை வகித்தார்.