districts

திருச்சியில் 1569 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கல்

திருச்சிராப்பள்ளி, பிப்.27- திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு ஞாயி றன்று பெரிய மிளகுபாறை நகர்நல மையத்தில், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலி யோ சொட்டு மருந்தினை வழங்கி நிகழ்வினைத்  தொடங்கி வைத்தார்.  பின்னர் மாவட்ட ஆட்சியர் கூறுகையில், திருச்சி மாவட்டத்தின் கிராமப்புறங்களில் 1279  மையங்களிலும், மாநகராட்சியில் 247 மையங்களிலும், துறையூர் நகராட்சியில் 20 மையங்களிலும், மணப்பாறை நகராட்சியில் 23 மையங்களிலும் என மொத்தம் 1569  மையங்களில் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்குட்பட்ட அனைத்து  குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. ஸ்ரீரங்கம், குணசீலம், சமயபுரம், வயலூர் ஆகிய கோயில்கள், மசூதி கள் தேவாலயங்கள் மற்றும் அனைத்து பேருந்து நிலையங்கள், ரயில்வே நிலையங் கள், விமான நிலையம், முக்கொம்பு போன்ற  சுற்றுலாத் தலங்கள் ஆகிய அனைத்து இடங்களிலும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க 55 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்து வர  இயலாத இடங்களில் அவர்களுக்கு 69 நடமா டும் குழுக்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. மேலும் ரயில்வே நிர்வாகத்துடன் இணைந்து  திருச்சியிலிருந்து செல்லும் மற்றும் திருச்சி வழியாக செல்லும் அனைத்து ரயில்களில் பயணம் செய்யும் 5 வயதுக்குட்பட்ட குழந்தை களுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க  சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. கிராமப் புறங்களில் 151608 குழந்தை களுக்கும், நகர்ப்புறங்களில் 83156 குழந்தை களுக்கும் என  மொத்தம் 234764 குழந்தைகளுக்கு  சொட்டு மருந்து கொடுக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் இடம் பெயர்ந்து குடியிருப் போர் மற்றும் நாடோடிகளின் குழந்தைகள் 382 பேர்களுக்கும்  போலியோ சொட்டு மருந்து  வழங்கப்பட உள்ளது. மொத்தம் திருச்சி மாவட்டத்தில் 235146 குழந்தைகளுக்கு போலி யோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப் பட்டுள்ளது என்றார்.