திருச்சிராப்பள்ளி, ஜூலை 17-
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்க திருவெறும்பூர் வட்டக்குழு சார்பில் சங்கிலி முத்து மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனுவில் தெரிவித்தி ருந்ததாவது:
திருச்சி மாவட்டம் திரு வெறும்பூர் வேளாண்மை விரி வாக்க அலுவலகத்தில், வேளா ண்மை உதவி அலுவலர்கள் கடந்த பல வருடங்களாக பணி புரிந்து வருகின்றனர். இவர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் ஏஜெண்ட்கள் மூலமாக, அவர் கள் சொல்கிற நபர்களுக்கு பினா மியாக அரசு நலத் திட்டங்களை வழங்குகிறார்கள். குறிப்பாக இசபெல்லா என்ற உதவி அலுவலர் தற்போது தமி ழக அரசு வழங்கிய பேரிடர் நிவா ரண நிதியை முறைகேடாக கிளி யூர், பத்தாளப்பேட்டை விவ சாயிகளுக்கு வழங்கியுள்ளார்.
இதுகுறித்து ஆதாரத்துடன் தங்களிடம் பலமுறை மனு கொடுத்துள்ளோம். நடவடிக்கை எடுக்க வேண்டிய மாவட்ட வேளா ண்மை இணை இயக்குநர், அவர்களை பாதுகாப்பதில் ஆர்வமாக உள்ளார். மேலும் மாவட்ட இணை இயக்குநர் பல கோடி ஊழல் செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் தக வல்கள் வேகமாக பரவி வரு கின்றன. எனவே அவர்மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தி ருந்தார்.
இதேபோன்று பத்தா ளப்பேட்டை வட்டக்குழு தமிழ்ச் செல்வன் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனுவில், “திருச்சி திருவெறும்பூர் வட்டம் பத்தா ளப்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் கோடை நெல்சாகு படி செய்துள்ளனர். மேற்படி நெல் அறுவடை நடக்கிறது. எனவே நேரடி கொள்முதல் நிலையம் பத்தாளப்பேட்டையில் திறந்து விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்” என தெரிவித்தி ருந்தார்.