தஞ்சாவூர், ஜன.19 - தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் பிப்.10 ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளதையொட்டி, திருப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் சனிக்கிழமை ஆய்வு செய்தார். இக்கோயிலில் கடைசியாக 2004 ஜூன் 27 ஆம் தேதி குடமுழுக்கு விழா நடை பெற்றது. ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு பின்பு, 2025 பிப்.10 அன்று குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. இதையொட்டி, திருப்பணிகள் கடந்த ஓராண்டாக நடை பெற்று வருகின்றன. இந்நிலையில், இவ்விழா பிப்.3 அன்று காலை 7.25 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்குகிறது. பின்னர், பிப். 7 அன்று மாலை 4.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் முதல் கால யாக பூஜையும், தொடர்ந்து 6 கால யாக பூஜை களும் நடைபெறுகின்றன. பிப்.10 அன்று காலை 9.10 மணிக்கு யாக சாலையில் இருந்து மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங் களுக்கு கலசங்கள் புறப்பாடும், காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் குட முழுக்கும் நடைபெறவுள்ளன. இதற்காக யாக சாலைகள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சி யர் பா. பிரியங்கா பங்கஜம் சனிக்கிழமை ஆய்வு செய்தார். அப்போது, அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கோ.கவிதா, கோயில் செயல் அலுவலர் ந. மணிகண்டன் உள்ளிட் டோர் உடனிருந்தனர்.