திருச்சிராப்பள்ளி, ஜூன் 14-
திருச்சி ரயில்வே காவல் மாவட்டம் லால்குடி மேளவாளாடியில் நாகர்கோவில் சென்னை எஸ்பிரஸ் செல்லும் ரயில் தண்டவாளத்தில் 2 டயர்கள் வைக்கப்பட்டிருந்தது. ரயில் ஓட்டுநர் இதை கவனித்ததால் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து திருச்சி ரயில்வே டி.எஸ்.பி பிரபாகரன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் சுமார் 30-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில் மேலவாளாடியை சேர்ந்த வெங்கடேசன், பிரபாகரன், கார்த்திக் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களி டம் மேற்கொண்ட விசாரணையில், சுரங்க பாலம் சரியான இடத்தில் கட்டவில்லை; முறையாக சாலை வசதி இல்லை என்று அரசின் கவ னத்தை ஈர்க்க இவ்வாறு செய்ததாக தெரிவித்துள்ளனர்.
இவர்கள் மீது ரயில் கவிழ்ப்பு அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்படும். மேலும் ரயிலை கவிழ்க்க திட்டம் என்கிற அடிப்படை யில் இவர்கள் பேர் மீதும் கடுமையான நடவடிக்கை, தண்டனை இருக்கும் என திருச்சி மண்டல ரயில்வே எஸ்.பி செந்தில்குமார் செய்தியாளர்களி டம் கூறினார்.