கரூர், மே 3 - கட்டுமான பணிக்கு மூலப்பொரு ளான மணல் கரூர் மாவட்டத்தில் தட்டுப்பாடின்றி கிடைத்திடவும், மணல் அள்ளுவதின் மூலம் வாழ்ந்து வரும் குடும்பங்களை பாதுகாக்கும் வகையிலும், தமிழக அரசு மணல் குவாரிகளை திறப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டது. மேலும் இணையம் மூலம் மணல் விற்கும் பணிகள் கடலூர், தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. கரூர் மாவட்டத்தின் காவிரி மற்றும் அமராவதி ஆறுகளில் ஏற்க னவே அனுமதி பெற்று இயங்கி வந்த குவாரிகளைகூட மீண்டும் திறப்பதற் கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படாமல் உள்ளன. இதனால் மணல் அள்ளும் ஆயிரக்கணக்கான குடும் பங்கள் வாழ்க்கையை நடத்த கடும் சிரமங்களை சந்தித்து வரு கின்றனர். மேலும் மாடுகளை பராம ரிக்கவும் அதற்கு உணவு வழங்க முடி யாமலும் உள்ளனர். மணல் மாட்டுவண்டி தொழிலா ளர்களின் வாழ்வாதாரத்தை பாது காப்பதிலும் மாடுகளை பாதுகாத்திட வும், கரூர் மாவட்டத்தில் ஏற்கனவே செயல்பட்டு வந்த மணல் மாட்டு வண்டி குவாரிகளை திறப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும் என வலியுறுத்தி கரூர் மாவட்ட மணல் மாட்டுவண்டி தொழி லாளர் சங்கத்தின் சார்பில் பெருந்தி ரள் ஆர்ப்பாட்டம் மற்றும் மனு அளிக்கும் போராட்டம் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.தண்ட பாணி தலைமை வகித்தார். சிஐடியு கரூர் மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந் தம், மாவட்டச் செயலாளர் சி.முருகே சன், தையல் சங்க மாவட்டச் செயலா ளர் ஹோச்சுமின், டாஸ்மாக் சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ண மூர்த்தி, கட்டுமான சங்க மாவட்ட செய லாளர் சரவணன், மாநிலக்குழு உறுப்பினர் ராஜேஸ்வரி, மாட்டு வண்டி சங்க நிர்வாகிகள் பிரகாஷ், தீக்கதிர் கந்தசாமி ஆகியோர் கோரிக் கைகளை விளக்கிப் பேசினர். மாவட்ட ஆட்சியரிடம் மாமன்ற உறுப்பினர் தண்டபாணி தலைமையில் சிஐடியு நிர்வாகிகள் மனு அளித்தனர். கரூர் மாவட்ட ஆட்சியரிடம் அளிக் கப்பட்டுள்ள மனுவிற்கு, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கா விட்டால், ‘மாடுகளை கொண்டு வந்து அரசிடமே ஒப்படைத்து விடு வது’ என முடிவெடுக்கப்பட்டுள்ளது.