தஞ்சாவூர், ஆக.12-
தமிழ்ப் பல்கலைக்கழக அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறையும், மலேசியாவின் பேராக் மாநிலத்திலுள்ள சுல்தான் இத்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை யும், 2014 ஆம் ஆண்டு மாணவர்கள்-ஆசிரி யர்கள் பரிமாற்றம் தொடர்பாகப் புரிந்து ணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டன.
அதன்படி, ஆண்டுதோறும் கருத்த ரங்கங்கள், பயிலரங்குகள் நடத்துவது போன்ற நிகழ்வுகளை இந்நிறுவனங்கள் மேற் கொண்டு வந்தன. தற்போது கொரோனா பெருந்தொற்றுக்குப் பின், சுல்தான் இத்ரிஸ் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையைச் சேர்ந்த 42 மாணவர்கள் பேராசிரியர் மனோன் மணிதேவி தலைமையில் தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்குக் கல்விப்பயணம் வந்தனர்.
இம்மாணவர்களுக்காக, மலேசியத் தமிழ்க்கல்வி - வரலாறு-பண்பாடு என்னும் பொருண்மையில் வெள்ளியன்று இளை யோர் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட் டது. இக்கருத்தரங்கினைத் தமிழ் பல்கலைக் கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து, சுல்தான் இத்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் மனோன்மணி தேவி தலைமையில் கருத்த ரங்கம் நடைபெற்றது.
இதில், பரதம், வீணை இசை மற்றும் வாய்ப்பாட்டு நிகழ்ச்சிகள் இசைத்துறை மாணவர்களால் வழங்கப்பட்டன. விழாவின் முக்கிய அம்சமாக இருநாடுகளின் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் நாட்டுப்பண்கள் இசைக்கப் பட்டன.