districts

img

‘ஏகாதிபத்தியத்திற்கு பணிய மறுப்பதால் நான் கம்யூனிஸ்ட்’

“ஆம், நான் ஒரு புரட்சியா ளன். எனது நாட்டை அடி மைப்படுத்தி வைத்திருக்கும் காலனி ஆதிக்க ஏகாதிபத்திய சக்திகளின் மிரட்டல்களுக்கு பணிய மறுத்ததால் அவர்கள் என்னை கம்யூனிஸ்ட் என்று அழைக்கிறார்கள்”. -பாட்ரிஸ் லுமும்பா பாட்ரிஸ் லுமும்பா. ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கு முன்பு, இதே தினத் தில் ஜனவரி 17, 1961 அன்று அவர் படுகொலை செய்யப்பட்டார். அவர் காங்கோ ஜனநாயகக் குடியரசில் சட்டப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதமர். பெரும் போராட்டத் திற்குப் பிறகு பெல்ஜியத்தின் காலனி நாடாக இருந்த காங்கோ விடுதலை பெற்று ஏழு மாதங்களே ஆகியிருந்த நிலையில் அவர் கொல்லப்பட்டார். அமெரிக்க அரசு உதவியுடன், பெல் ஜிய அரசு சதி திட்டம் தீட்டி இக்கொடூ ரமான கொலை அரங்கேற்றப்பட்டது. இப்படுகொலையை “20 ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான படு கொலை” என்று மதிப்பீடு செய்கிறார் பெல்ஜிய எழுத்தாளர் லுடோ டி விட்டே. இத்தகு மதிப்பீட்டிற்கான கார ணம் அன்றைய பனிப்போர் நிறைந்த உலகச் சூழலும், அன்றிலிருந்து காங்கோ அரசியலில் இப்படுகொலை ஏற்படுத்தி வரும் தாக்கமும் தான். இது தவிர தேசிய தலைவராக பரிண மித்த லுமும்பா உருவாக்கிய ஒட்டு மொத்த ஆப்பிரிக்காவிற்கான ஒரு தேசிய பாரம்பரியமும் மிக முக்கிய மான காரணமாகும்.

கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலா கவே காங்கோ தேசத்தின் தலைவிதி யை தீர்மானிப்பதில் அமெரிக்காவும் பெல்ஜியமும் முக்கியப் பங்காற்றி வருகின்றன. 1884 ஆம் ஆண்டிலேயே, காங்கோ பகுதிகளின் மீது பெல்ஜிய மன்னர் இரண்டாம் லியோபோல்ட் உரிமை கோரினார். இந்த ஆதிக்க ஆக்கிரமிப்பை உலகில் முதலில் அங்கீகரித்த நாடு அமெரிக்கா. இதற்கு பிறகு காங்கோவில் லியோ போல்ட் மிருகத்தனமாக பல்வேறு அட்டூழியங்களை செய்தான்; லட்சக்க ணக்கான மக்களை கொன்றழித்தான். பெல்ஜியத்தின் காலனி நாடாக காங்கோ இருந்த இக்காலத்தில் தான் காங்கோவின் இயற்கை செல்வத் தினைக் முழுவதும் கைப்பற்றி தனது நலனுக்கு பயன்படுத்திக் கொண்டது அமெரிக்கா. முதல் அணுகுண்டு களான ஹிரோஷிமா மற்றும் நாகசாகி குண்டுகளைத் தயாரிக்க காங்கோ சுரங்கங்களிலிருந்து பெறப்பட்ட யுரேனியத்தைத்தான் அமெரிக்கா பயன்படுத்தியது என்றால் காங்கோ தேசத்தின் முக்கியத்துவத்தை நாம் புரிந்துக் கொள்ள முடியும். பனிப்போர் வெடித்தவுடன், அமெ ரிக்காவும் அதன் மேற்கத்திய நட்பு நாடு களும் யுரேனியம் உள்ளிட்ட காங்கோ வின் இயற்கை செல்வங்கள் சோவி யத் முகாமில் உள்ளவர்களின் கை களில் விழுந்து விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தன. ஆனால், இவ்வேளையில், உண்மை யான சுதந்திரத்தை பெறுவதற்காக வும், காங்கோவின் வளங்களை எல் லாம் முழுமையாகப் பயன்படுத்தி, தம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காகவும் இளம் புரட்சி வீரனான பாட்ரிஸ் லுமும்பா உறுதிப்பாடு கொண்டிருந்தார். இது மேற்கத்திய நாடுகளின் நலன்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்தது. எனவே, லுமும்பாவை கொல்வதற்கு அமெ ரிக்காவும் பெல்ஜியமும் திட்டம் தீட்டின. இதற்காக, அமெரிக்காவும், பெல்ஜியமும் லுமும்பாவின் எதிர்ப்பாளர்களின் ஆதரவைப் பெறு வதற்கும், கொலையாளிகளை அமர்த்திக் கொள்வதற்கும், டாக் ஹம்மர்ஸ்க்ஜோல்ட் மற்றும் ரால்ப் பன்சே ஆகியோரின் தலைமையில் ஐக்கிய நாடுகள் செயலகம் உட்பட அனைவரின் ஒத்துழைப்பையும் பெற்றுக் கொண்டன. இறுதியில் வெற்றியும் பெற்றன. லுமும்பாவின் படுகொலை காங்கோவின் பாவமாக கருதப்படு கிறது. சுதந்திரம் அடைந்து (ஜூன் 30, 1960 இல்) ஏழு மாதங்களுக்குள் இப்படுகொலை நிகழ்ந்தது. தேசிய ஒற்றுமை, பொருளாதார சுதந்திரம் மற்றும் லுமும்பா உருவாக்கிய ஒட்டு மொத்த ஆப்பிரிக்க ஒற்றுமை ஆகிய இலட்சியங்களுக்கு இப்படுகொலை ஒரு முட்டுக்கட்டையாக மாறிப் போனது. அத்துடன் லட்சக்கணக்கான காங்கோ மக்களின் சுதந்திரம் மற்றும் பொருளாதார விடுதலைக்கான நம்பிக்கை மீது விழுந்த அடியாகவும் இருந்தது.

இப்படுகொலைக்கு பின் நான்கு தனித்தனி அரசாங்கங்களின் கீழ் நாடு  வீழ்ந்தது. கின்ஷாசாவில் மத்திய அர சாங்கம் (அப்போது லியோபோல்ட்வில்); கிசங்கானியில் (அப்போது ஸ்டான்லி வில்) லுமும்பாவின் ஆதரவாளர் களால் ஒரு போட்டி மத்திய அர சாங்கம்; மற்றும் கனிம வளங்கள் நிறைந்த கடங்கா மற்றும் தெற்கு கசாய் மாகாணங்களில் பிரிவினைவாத ஆட்சிகள். லுமும்பாவை கொலை செய்ததன் மூலம் காங்கோவில் தங்க ளது நலன்களுக்கு இருந்த பெரும் அச்சுறுத்தலை மேற்கு நாடுகள் அகற்றிவிட்டன.

இதற்கு பிறகு கின்ஷா சாவில் இருந்த மிதவாத மற்றும் மேற் கத்திய ஆதரவு ஆட்சியின் அதிகா ரத்தை நாடு முழுவதும் மீட்டெடுக்க சர்வதேச அளவில் முயற்சிகள் மேற்கொண்டன. இதன் விளைவாக ஆகஸ்ட் 1961 இல் கிசாங்கனியில் லுமூம்பிஸ்ட்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது, செப்டம்பர் 1962 இல் தெற்கு  கசாய் பகுதியும் மற்றும் ஜனவரி 1963இல் கடங்கா பகுதியும் ஏகாதிபத் திய ஆதிக்கசக்திகளின் கட்டுப்பாட் டிற்கு வந்தன. இந்நிகழ்வுகளுக்கு பின்னர், “இரண்டாம் சுதந்திரத்திற்கான” தீவிர சமூக இயக்கம் எழுச்சி பெற்றது. விவசாயிகள், தொழிலாளர்கள், நகர்ப்புற வேலையற்றோர், மாண வர்கள் மற்றும் அடிமட்ட அரசு ஊழி யர்களைக் கொண்ட வெகுஜன இயக் கம் உருவானது. இவ்வியக்கம் லுமும் பாவின் தளபதிகள் இடையே ஒரு ஆர்வமுள்ள தலைமையைக் கண் டது. அவர்களில் பெரும்பாலனவர்கள் கின்ஷாசாவிலிருந்து காங்கோ ஆறு வரையிலான பிரதேசத்திற்கு ஒரு தேசிய விடுதலை கவுன்சிலை (CNL) அமைப்பதற்காக 1963 ஆம் ஆண்டு அக்டோபரில் ப்ராஸ்ஸாவில்லியில் மீண்டும் ஒன்றிணைந்தவர்கள். இந்த இயக்கத்தின் பலம் மற்றும் பல வீனங்கள் எல்லாம் காங்கோ மற்றும் ஆப்பிரிக்கா முழுவதற்குமான பாட்ரிஸ் லுமும்பாவின் ஒட்டுமொத்த பாரம்பரியத்தை அளவிடுவதற்கான ஒரு வழியாக இருக்கலாம். ஜனநாயகம் மற்றும் சமூக முன் னேற்றம் ஆகியவற்றின் மீது காங்கோ மக்கள் ஆழமான விருப்பங்களை கொண்டிருந்தனர். அவற்றை நிறைவு செய்யும் நோக்கத்திற்காக பாட்ரிஸ் லுமும்பாவை தங்களது நெஞ்சில் ஏந்தினார்கள்.  35 வயதே ஆன புரட்சியாளர் லுமும்பா , ஆப்பிரிக்கர்களுக்கு மட்டு மல்ல; உலகம் முழுவதும் காலனி யாதிக்கத்திற்கு எதிராக - ஏகாதிபத்தி யத்திற்கு எதிராகப் போராடும் ஒவ் வொருவருக்கும் ஆதர்சம் அளிக்கும் சக்தியாக மாறினார்.

லுமும்பாவைப் போற்றிய மதுரை

மதுரை கம்யூனிஸ்ட் இயக்கமும் லுமும்பாவின் நினைவுகளை நெஞ் சில் ஏந்திக் கொண்டது.  மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உலக புரட்சியாளர்களை போற் றும் வகையில் பொதுமக்கள் பயன் பெறும் வகையில் படிப்பகங்களை அமைத்தது. அந்த வகையில் மேலப் பொன்னகரம் பகுதியில் ரஷ்ய எழுத் தாளர் மாக்சிம் கார்க்கி, புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ போன்ற தலைவர் கள் பெயரில் படிப்பகங்கள் அமைக் கப்பட்டன. பெத்தானியாபுரம் பகுதி யில் லுமும்பா நினைவாக 1974ஆம் ஆண்டு பாட்ரீஸ் லுமும்பா படிப்பகம் உதயமானது. 48 ஆண்டுகளாக இப்பகுதியில் படிப்பகம் செயல்பட்டு வருகிறது. பலரும் இங்கு வரும் நாளிதழ்களை தினசரி படித்துவிட்டு செல்கிறார்கள். மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொ. மோகன், தோழர் என். நன்மாறன் போன்ற தலைவர்கள் இங்கு அமர்ந்து தோழர்களுடன் உரையாடுவது வழக் கம். அப்படி உலகத் தலைவர்களை, அவர்களது வரலாற்றை தெரிந்து கொள்ளும் வகையில், ஏகாதிபத்திய எதிர்ப்பு சிந்தனையை மக்கள் மத்தி யில் எடுத்துச் செல்லும் விதத்தில் மது ரையில் இதுபோன்ற படிப்பகங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உரு வாக்கியது என்கிறார் மூத்த தோழர் பா.மாரிச்சாமி.  லுமும்பா ஏற்றி வைத்த ஏகாதி பத்திய எதிர்ப்பு நெருப்பு, அவரது படுகொலையின் 60ஆம் ஆண்டு நிறைவின் இந்த தருணத்திலும் பற் றிப் பரவுகிறது. கம்யூனிஸ்ட் இயக்கம் என்றென்றும் லுமும்பாவின் புரட்சிகர நோக்கத்தை உயர்த்திப் பிடிக்கிறது. 

- அ.கோவிந்தராஜன், ஜெ.பொன்மாறன்