புதுக்கோட்டை, டிச.29 - புதுக்கோட்டை மாவட்டத் தில் 216 பயனாளிகளக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல் மற்றும் சிட்டா, அடங்கல்களுக்கான ஆணைகளை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச் சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் வியாழக்கிழமை வழங்கினர். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகராட்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில், அறந்தாங்கி கோட்ட அளவில் 177 பயனா ளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக் கள், 20 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான ஆணை கள், 19 பயனாளிகளுக்கு கிராம கணக்கு களில் பதிவின்றி இருந்த விலையில்லா வீட்டு மனை பட்டாக்களுக்கு சிட்டா, அடங்கல் ஆகியவற்றிற்கான ஆணைகள் என மொத்தம் 216 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டு மனை பட்டா, பட்டா மாறுதல் மற்றும் சிட்டா, அடங்கல் ஆகியவற்றிற்கான ஆணைகளை, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச் சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் வியாழக்கிழமை வழங்கினர். இதில் மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா, அறந்தாங்கி நகர்மன்றத் தலைவர் ஆனந்த், அறந்தாங்கி ஒன்றியக் குழுத் தலை வர் மகேஸ்வரி சண்முகநாதன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.