districts

வீட்டுமனை ஒப்படைப்பு விழா

தஞ்சாவூர், ஜூன் 23-  

     தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில், தமிழ்நாடு அரசு சார்பில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் மூலம், கடந்த மாதம் பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. இந்நிலையில், வியாழக்கிழமை மாலை பயனா ளிகளுக்கு, நில அளவை செய்யப்பட்டு, அவரவருக்கான வீட்டுமனைப்  பட்டா அடையாளம் காண்பித்து ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

     பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன் முன்னிலை யில், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் மொத்தம் 227 பயனாளிகளுக்கு, அடையாளம் காண்பிக்கப்பட்ட விலையில்லா வீட்டுமனைப் பட்டாவை வழங்கினார். நிகழ்ச்சியில், கொளக்குடி ஊராட்சி பாவேந்தர்புரம் நகரில் 128, கழனிவாசல் ஊராட்சி பாரதி யார்புரம் நகரில் 23, பேராவூரணி-2 தொல்காப்பியர்புரம் நகரில் 43,  மாவடுகுறிச்சி கிழக்கு ஊராட்சி பாவாணர்புரம் நகரில் 20, குருவிக் கரம்பை-1 ஊராட்சி ஔவையார்புரம் நகரில் 13 என மொத்தம் 227 பய னாளிகளுக்கு வீட்டுமனை ஒப்படைக்கப்பட்டது.