districts

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் விடுதி வசதி செய்து தர வேண்டும்

திருவாரூர், அக்.14 - அரசு மருத்துவக் கல்லூரி மாண வர்கள் போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தினர் ஆதரவு தெரி வித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவ மாணவர் அநாரியன். இவர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் பி.எஸ்சி. விபத்து மற்றும் அவசர சிகிச்சை  பிரிவு படிப்பில் முதலாம் ஆண்டு படித்து  வருகிறார். மாணவர் அநாரியன் மருத்துவக் கல்லூரிக்கு அருகில் அறை எடுத்து  தங்கி படித்து வந்ததாக கூறப்படு கிறது. புதன்கிழமை இரவு சாப்பிடுவ தற்காக மோட்டார் சைக்கிளில் உண வகத்திற்கு சென்றார். அப்போது மாவட்ட விளையாட்டு அரங்கத்தின் அருகில் உள்ள நீச்சல் குளம் அருகே சென்ற போது, எதிரே வந்த பேருந்து இவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் படுகாயம் அடைந்தார். படுகாயமடைந்த மாணவர் அநாரி யனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்த னர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அநாரியன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். கடந்த 3 ஆண்டுகளாக பாரா மெடிக் கல் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விடுதி வசதி இல்லாததால், விடுதி வசதி கேட்டு தொடர்ந்து நிர்வாகத்தை வலியுறுத்தி வருகின்றனர். விடுதி வசதி இல்லாத காரணத்தினால்தான் மாணவர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக கூறி மாணவ, மாணவிகள் கல்லூரி முதல்வர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாவட்டச் செயலாளர் பா. ஆனந்த், துணைத் தலைவர் வீ.சந்தோஷ்  உள்ளிட்டோர், மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜோசப்ராஜை கண்டித்தும், உயிரிழந்த மாணவனுக்கு நீதி வழங்கிட வேண்டும். மருத்துவக் கல்லூரி  வளாகத்தில் விடுதி வசதியை ஏற்படுத்த  வேண்டுமென வலியுறுத்தி போராட்டம்  நடத்தினர்.