பட்டுக்கோட்டை, ஜூலை 30-
பட்டுக்கோட்டை மெரினா மெடிக்கல் சென்டர் சார்பில், குழந்தைகளுக் கான இலவச பொது மருத்துவ முகாம், ஞாயிற் றுக்கிழமை நடைபெற்றது.
மருத்துவ முகாமில், குழந்தைகள் மருத்துவ நிபு ணர்கள் நிரஞ்சனா நிருபன், துளசி ஆகியோர் கலந்து கொண்டு, பச்சிளங் குழந் தைகள் முதல் 16 வயது வரை யிலான குழந்தைகளுக்கு சிசு நலம், ஊட்டச்சத்து, தடுப்பூசி, உடல் மற்றும் மன வளர்ச்சி, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்து மருத்துவ ஆலோசனைகள் வழங்கினர்.
காய்ச்சல், தலைவலி, சளி, இருமல், வயிற்று வலி, வயிற்றுப் போக்கு, ரத்த சோகை, சிறுநீரகப் பிரச் சனை, ஆஸ்துமா, இருதய நோய், வலிப்பு நோய்க்கு மருத்துவப் பரிசோதனை செய்து ஆலோசனையும், குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மருந்துகள் மற்றும் மருந்து, மாத்திரைகளும் இலவசமாக வழங்கப்பட் டது. இதில், இருநூறுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர்.
நிறைவாக மருத்துவர் நிருபன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை மெரினா ஆறு முகம் - உமா மற்றும் குடும் பத்தினர் செய்திருந்தனர்.