திருவாரூர் மாவட்டம் குடவாசல் பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு எண்.14 மற்றும் வார்டு எண்.1 ஆகிய இடங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளில் இல்லம் தேடிக் கல்வி மையம் பயிற்சி வகுப்பு துவக்க விழா நடைபெற்றது. வட்டார கல்வி அலுவலர் குமரேசன் தலைமை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் பூபாலன், அந்தப் பகுதியில் உள்ள ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களை கல்வி பயில ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.